பிரிவினை, கொடுங்கோல் ஆட்சி.. சாதாரண மக்களுக்கு எதிரான ஆயுதமாக சினிமாவை மாற்றிய ஞானி மறைவு..
மூத்த பெங்காலி நடிகரும் பிரபல நாடக ஆளுமையுமான மனோஜ் மித்ரா இன்று காலை கொல்கத்தாவின் சால்ட் லேக்கில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 85.

பிரிவினை, கொடுங்கோல் ஆட்சி.. சாதாரண மக்களுக்கு எதிரான ஆயுதமாக சினிமாவை மாற்றிய ஞானி மறைவு..
மூத்த பெங்காலி நடிகரும் பிரபல நாடக ஆளுமையுமான மனோஜ் மித்ரா இன்று காலை கொல்கத்தாவின் சால்ட் லேக்கில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 85.
வயது மூப்பு மற்றும் சுவாசப் பிரச்சினையால் அவதிப்பட்ட மித்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 8.50 மணியளவில் உயிரிழந்தார்.
அரசியல் பிரச்சனைகளை முன்வைத்த நாயகன்
பெங்காலி நாடக ஆளுமையான மனோஜ் மித்ரா, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி நாடகங்கள் மற்றும் கூத்துகள் எழுதுவதற்கும் இயக்குவதற்கும் மிகவும் பெயர் பெற்றவர். அவரது நாடகங்கள் ஒடுக்கப்பட்ட சாதாரண மக்களின் போராட்டத்தையும் கோடிட்டுக் காட்டின.