Vengaivayal case: ‘வேங்கைவயல் விவகாரம்.. ஏன் இவ்வளவு தாமதம்..? இவங்க வந்தும் அதேதான் பண்றாங்க’ - பார்த்திபன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vengaivayal Case: ‘வேங்கைவயல் விவகாரம்.. ஏன் இவ்வளவு தாமதம்..? இவங்க வந்தும் அதேதான் பண்றாங்க’ - பார்த்திபன்

Vengaivayal case: ‘வேங்கைவயல் விவகாரம்.. ஏன் இவ்வளவு தாமதம்..? இவங்க வந்தும் அதேதான் பண்றாங்க’ - பார்த்திபன்

Kalyani Pandiyan S HT Tamil
Jan 25, 2025 09:21 AM IST

Vengaivayal case: அதே எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாக வரும் பொழுது, அவர்களும் அதே விஷயத்தை செய்கிறார்கள். இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால், இங்கே எதிர்ப்பதற்கும், பேசுவதற்கும் ஏதோ ஒரு விஷயம் இருந்து கொண்டே இருக்கிறது. - நடிகர் பார்த்திபன்

Vengaivayal case: ‘வேங்கைவயல் விவகாரம்.. ஏன் இவ்வளவு தாமதம்..? இவங்க வந்தும் அதேதான் பண்றாங்க’ - பார்த்திபன்
Vengaivayal case: ‘வேங்கைவயல் விவகாரம்.. ஏன் இவ்வளவு தாமதம்..? இவங்க வந்தும் அதேதான் பண்றாங்க’ - பார்த்திபன்

கிட்டத்தட்ட 750 நாட்களுக்கு மேலாக நடந்து வந்த இந்த வேங்கை வயல் விவகாரத்தில் முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூன்று பேருக்கு தொடர்பு இருப்பதாக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் குற்றப்பத்திரிகை தாக்க செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இது தொடர்பாக சாத்தூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த பார்த்திபன் பேசி இருக்கிறார்.

ஏன் இவ்வளவு காலம்?

இது குறித்து அவர் பேசும் போது, ‘வேங்கைவயல் விவகாரத்தில் ஏன் இவ்வளவு காலதாமதம் ஆகிறது. இரண்டு பேர் குற்றவாளிகள் என்று பதிவு செய்யப்பட்ட போதும், நீதி வழங்க எதற்கு இவ்வளவு காலம் பிடிக்கிறது.

நான் நிறைய விஷயங்களுக்காக காவல்துறையை அணுகியிருக்கிறேன். அப்போது எனக்கு தெரியவந்தது என்னவென்றால், அவர்களுக்கு ஏகப்பட்ட அழுத்தங்கள் இருக்கின்றன. ஏதாவது ஒரு சின்ன விஷயத்தில் கவனம் செலுத்தும் பொழுது, அதற்கு முன்னதாக அவர்கள் கவனம் செலுத்திய பெரிய விஷயம் பழைய விஷயமாக, மிகவும் பழைய விஷயமாக மாறிவிடுகிறது.

தற்போது வந்திருக்கும் புதிய விஷயங்கள் மீது மேலும் சில புதிய விஷயங்கள் வந்து விடும். அப்படி இருக்கும் பொழுது, அவர்களுக்கு அழுத்தம் என்பது இயல்பாகவே வந்து விடுகிறது.

மகிழ்ச்சியான விஷயம்

இப்போது வேங்கை வேல் புகாரில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது என்பது மகிழ்ச்சியான விஷயம். இதைப் பற்றி எதிர் கருத்து சொல்லும் பொழுது, அது வேறு விஷயமாக மாறி அப்படியே சென்று கொண்டே இருக்கும். ஒரு கட்சி ஆட்சி செய்யும் பொழுது, எதிர்க்கட்சியானது ஆளுங்கட்சியை இதை செய்யக்கூடாது; அதை செய்யக்கூடாது என பல விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஆனால், அதே எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாக வரும் பொழுது, அவர்களும் அதே விஷயத்தை செய்கிறார்கள். இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால், இங்கே எதிர்ப்பதற்கும், பேசுவதற்கும் ஏதோ ஒரு விஷயம் இருந்து கொண்டே இருக்கிறது; அரசாங்கத்தை ஆதரித்து அவர்களிடமிருந்து நல்ல விஷயங்களை வாங்கிக் கொள்வது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது.

அதே நேரம், அரசாங்கத்தை கண்மூடித்தனமாக ஆதரிக்காமல் அவர்கள் குற்றம் செய்யும் பொழுது அதை சுட்டிக் காட்ட வேண்டியது மக்களுடைய கடமை. ஜல்லிக்கட்டை எடுத்துக் கொள்வோம் அதற்கு உடனடியாக தீர்வு கிடைக்கவில்லை. மக்கள் முன் நின்று போராட்டம் நடத்திய பின்னர்தான், நமக்கு அது மீண்டும் கிடைத்தது. அதேபோல இங்கு மக்கள் பிரச்சினையை மக்கள் பேசினால்தான் விஷயம் நடக்கும்.

நான் கட்சிக்கு அப்பாற்பட்டவன். வேங்கை வயல் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க காவல் துறை தன்னுடைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.’ என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.