HTExclusive: ‘மாடோ, பன்னியோ, கோழியோ.. கறிக்காக கொல்றது ரொம்ப தப்பு; ரஜினி சார் ஒரு டீன் ஏஜ் பையன்’- வேதிகா எக்ஸ்க்ளூசிவ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Htexclusive: ‘மாடோ, பன்னியோ, கோழியோ.. கறிக்காக கொல்றது ரொம்ப தப்பு; ரஜினி சார் ஒரு டீன் ஏஜ் பையன்’- வேதிகா எக்ஸ்க்ளூசிவ்

HTExclusive: ‘மாடோ, பன்னியோ, கோழியோ.. கறிக்காக கொல்றது ரொம்ப தப்பு; ரஜினி சார் ஒரு டீன் ஏஜ் பையன்’- வேதிகா எக்ஸ்க்ளூசிவ்

Kalyani Pandiyan S HT Tamil
Dec 21, 2024 11:36 AM IST

மாடோ, பன்னியோ, கோழியோ அது எல்லாவே ரொம்ப ரொம்ப புத்திசாலியானவை; அவைகள நாம ஒரு உயிரா பாக்காம.. ஒரு பொருளா ட்ரீட் பண்றோம். - வேதிகா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

HTExclusive: ‘மாடோ, பன்னியோ, கோழியோ.. கறிக்காக கொல்றது ரொம்ப ரொம்ப தப்பு; ரஜினி சார் ஒரு டீஜ் ஏஜ் பையன்’ - வேதிகா பேட்டி
HTExclusive: ‘மாடோ, பன்னியோ, கோழியோ.. கறிக்காக கொல்றது ரொம்ப ரொம்ப தப்பு; ரஜினி சார் ஒரு டீஜ் ஏஜ் பையன்’ - வேதிகா பேட்டி

தமிழில் ‘முனி’ படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து சாந்தனுவின் ‘சக்கரக்கட்டி’, சிம்புவுடன் ‘காளை’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘பரதேசி’ படத்தில் இவர் வெளிப்படுத்திய நடிப்பு அனைவரையும் புருவம் விரிய வைத்தது என்றால், அதற்கடுத்தபடியாக வெளியான காவியத்தலைவன் படத்தில் வேதிகா வெளிப்படுத்திய நடிப்பு அனைவரையும் வியக்க வைத்தது.

அதன் பின்னர் காஞ்சனா 3 - ல் நடித்தவர் தற்போது தெலுங்கில் வெளியான ஃபியர் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் ஓரளவிற்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், அவருடன் உரையாடினேன். அதன் இரண்டாம் பாகம் இங்கே!

பரதேசி, காவியத்தலைவன் படங்கள்ல உங்களோட நடிப்புக்கு பாராட்டு கிடைச்சாலும், அந்தப்படங்கள் பெருசா வரவேற்பு பெறலையே?

அத பத்தி நான் என்னைக்குமே கவலைப்பட்டது கிடையாது. என்ன பொருத்தவரை, எனக்கான சக்சஸ், நான் எனக்கு கிடைச்ச ரோல ஒழுங்கா பண்ணனும். அதுல என்னோட முழு ஃபோக்கஸூம் இருக்கணும். அத அந்தப்படங்கள்லையும் நான் செஞ்சேன்.

வேதிகா
வேதிகா

அந்த படங்கள் மூலமா எனக்கு நிறைய மரியாதை கிடைச்சிருக்கு... அதுல நான் வெளிப்படுத்திருந்த நடிப்ப பார்த்துட்டு கன்னடத்துல சிவராஜ்குமார் நடிச்சு 100 நாள் ஓடுன சிவலிங்கா படத்துல பி.வாசு சார் என்ன கமிட் பண்ணார். மலையாளத்துல நடிகர் திலீப்குமார் கூட நடிக்க வாய்ப்பு கிடைச்சது. இன்னைக்கு வரைக்கும் பரதேசி, காவியத்தலைவன் படங்களால நான் பயனடைஞ்சிட்டு இருக்கேன். ஆக, என்னோட புக்ல அந்தப்படங்கள் எனக்கு சக்சஸ்தான்.

பெருசா உங்கள பத்தி சர்ச்சைகளே இல்லையே?

என்ன சுத்தி, எனக்கான மரியாதை வட்டம்னு ஒன்னு இருக்கு. அந்த வட்டத்த தாண்டி யாரையும் நான் நெருங்கவிட மாட்டேன். என்னோட பர்சனல் லைஃப் வேற.. என்னோட தொழில் வாழ்க்கை வேற.. நான் பெருசா நிகழ்ச்சிகள்ல பங்கெடுத்துக்குறது கிடையாது. காரணம், எனக்கு 8 மணி நேர தூக்கம் ரொம்ப முக்கியம். அப்பதான் அடுத்தநாள் என்னோட மைண்ட் ஃப்ரஷ்ஷா இருக்கும். தமிழ் என்னோட தாய்மொழி கிடையாது. ஆனா, இப்ப அதுதான் என்னோட தாய்மொழி மாதிரி பேச ஆரம்பிச்சிட்டேன். என்னோட மைண்ட் நல்லா இருந்தாத்தான் ஷூட்டிங் ஸ்பாட்ல என்னால இந்த மாதிரி விஷயங்கள்ல என்ன முழுசா கொடுக்க முடியும். இதுக்காவே நான் வெளிய போறதில்ல. நான் எல்லோரோடையும் சகஜமா பழகுற பர்சன் கிடையாது. அதனாலேயே என்கிட்ட யாரும் பெருசா வரமாட்டாங்க.. அதுவும் என்னப்பத்தி பெருசா சர்ச்சைகள் வராததிற்கு காரணம்.

விலங்குகள் மேல வேதிகாவுக்கு பெரிய மரியாதை இருக்கே? எப்படி இந்த மாற்றம்?

என்னோட ஃப்ரீ டைம்ல, என்னோட நாய் கூடதான் பெரும்பான்மையான நேரத்த கழிப்பேன். மனுஷங்க கூட இருக்குறத விட, அவங்க கூட இருக்கும் போது, நான் ரொம்ப சந்தோஷமா, நிம்மதியா இருக்கேன். நான் இப்ப முழுக்க, முழுக்க வெஜிடேரியனா மாறிட்டேன். இதனால என்னோட உடம்புல பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கு.

 

வேதிகா
வேதிகா

நான் வெஜிடேரியனா மாறுனதுக்கு காரணமே விலங்குகள்தான். ஆமா,நான் இப்ப பால் சமந்தமான பொருட்கள், அசைவ உணவுகள், முட்டை உள்ளிட்ட எதையும் சாப்பிடுறதில்ல. மில்க் இன்ஸ்டீரில இப்ப ஒரு பசுவை செயற்கையா கருத்தரிக்க வச்சு, கன்னுக்குட்டி பிறந்த உடனே, அத அம்மாக்கிட்ட இருந்து பிரிச்சு, பால திருடுறாங்க.. கன்னுக்குட்டி ஆண் மாடா இருந்தா அத இறைச்சிக்கு கொண்டு போயிருவாங்க.. பெண் மாடா இருந்தா.. அம்மாவுக்கு ஏற்பட்ட அதே நிலைமை குழந்தைக்கும் வந்துரும்.

விலங்குகள் மற்ற விலங்குகளை வேட்டையாடிதான் அதுக்கான உணவை எடுத்துக்கும். ஆனா, மனுஷங்களுக்கு சைவத்துல அவ்வளவு உணவுகள் இருந்தாலும், அவங்க விலங்குகள சாப்பிடுறதுக்கு தேர்ந்தெடுக்குறாங்க..

அது ரொம்ப ரொம்ப தப்பு..

என்னோட நான் நாய முதல்ல வீட்டுக்கு கொண்டு வந்தப்ப.. முதல்ல என்னால அத முழுமையா புரிஞ்சிக்க முடியல.. காரணம், அதனால பேச முடியாது. அது என்ன நினைக்குது, மகிழ்ச்சியா இருக்கா இல்லையா, அதுக்கு பசிக்குதா? அப்படிங்கிற எல்லா விஷயத்தையும் நாமதான் கண்டு பிடிக்கணும்.. இந்த மாதிரி விஷயங்கள சரியா தெரிஞ்சிக்கிறதுகாகத்தான் சில விஷயங்கள தேடுனேன். அந்த தேடல்தான் 'What does fear look like' வீடியோ பார்த்தேன்.

 

மாடுகள்
மாடுகள்

அதுக்கு முன்னாடி வரைக்கும், மாடு சோகமா இருக்கும், மாடு அழும் போன்ற விஷயங்கள்லான் எனக்குத் தெரியாது. அதுல இருந்து நிறைய விஷயங்கள கத்துக்கிட்டேன். மாடோ, பன்னியோ, கோழியோ அது எல்லாவே ரொம்ப ரொம்ப புத்திசாலியானவை; அவைகள நாம ஒரு உயிரா பாக்காம.. ஒரு பொருளா ட்ரீட் பண்றோம். நீங்க அந்த வீடியோ பார்த்தீங்கன்னா.. மாடு பயப்படுறத நீங்க பார்க்க முடியும். இதுதான் என்ன வெஜிடேரியனா மாத்துச்சு.

ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் மேல வேதிகாவுக்கு பெரிய பிரியம் இருக்குன்னு கேள்வி பட்டோம்?

ஆமா, ரஜினி சார் மாதிரியான ஒரு பணிவான நபர பார்க்கவே முடியாது. காரணம், அவங்க வாழ்க்கையில அவ்வளவு பார்த்து இருக்காங்க.. அவர் கூட பேசும் போது, அவர் நம்மள ஒரு சூப்பர் ஸ்டார் போல உணர வைப்பார். அவர்கிட்ட எப்போதுமே டீன் ஏஜ் பையனுக்கான வைஃப் இருக்கும். காரணம் அவர் மைண்ட் அவ்வளவு க்ளீனா இருக்கு.. அவ்வளவு பாசிட்டிவிட்டிய வச்சுருக்காரு. ஒரு மனுஷன எப்படி ட்ரீட் பண்ணனும் அப்படிங்கிறத நான் அவர்கிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன்.

 

விஜய்
விஜய்

ரஹ்மான் சாரோட சைலன்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப சாஃப்ட்டாதான் பேசுவார். ஆனா, அவர் செயல்கள் மூலமா அவர் யார்ன்னு நம்மக்கிட்ட சொல்லிருவார். அவர் பேசி சீன் போடுற ஆள் கிடையாது. ஆனா எல்லாத்தையும் அவர் வேலை பேசும்.

விஜய் சார நான் முதல்ல மீட் பண்ண்னும்.. அதுக்கப்புறம் அவர்கூட நான் நடிக்கணும்.. அவர் பாலிட்டிக்ஸ்ல வந்தாலும், அவர் மீண்டும் நடிப்பார் அப்படிங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு... நான் அத நம்புறேன். அப்ப அவர் படத்துல நான் நடிப்பேன்..அந்த நாள் வரும்..’ என்று பேசி விடை பெற்றார்.

 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.