Kayal Serial: காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லும் வேதவள்ளி.. கயல் எடுக்கப்போகும் முடிவு என்ன?
Kayal Serial: தேவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால், கயல் அம்மா தன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வேதவள்ளி கயலிடம் கூறியுள்ளார்.

Kayal Serial: கயல் வீட்டினர் ஏற்பாடு செய்த வளைகாப்பிற்கு தான் வர வேண்டுமானால் என் அம்மா முதலில் தேவியை மன்னிக்க வேண்டும் என விக்னேஷ் கூறினார்.
சூடான வேதவள்ளி
இதனால், கயல் உமன்ஸ் கிளப்பில் இருக்கும் வேதவள்ளியைக் காண செல்கிறாள். அப்போது, கயலைப் பார்த்ததும் கோவமடைந்த வேதவள்ளி, கயலை தனியாக அழைத்து பேசுகிறாள். ஏற்கனவே, இங்குள்ள அத்தனை பேர் முன்னிலையிலும் என் தலைவர் பதவியை பறித்தாய். இப்போது என்ன திட்டத்தோடு வந்திருக்க என்று கேட்டு திட்டினார்.
காலில் விழ வேண்டும்
கயல் தேவியின் வளைகாப்பு பற்றி பேசியதும் சூடான வேதவள்ளி, உன் அம்மா என் காலிலும் என் பையன் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் அதுமட்டுமல்ல, எந்த ஆளுங்க முன்னாடி என் தலைவர் பதவி போச்சோ, அவர்கள் முன்னாடி நீ என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கணும் எண்பும் சொன்னார்.
குழப்பத்தில் கயல்
இதைக் கேட்டு ஷாக் ஆன கயல், இந்த விஷயத்தை எப்படி வீட்டிவ் சொல்வது, அவர்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பதை யோசித்து குழம்பி நிற்கிறார். இது குறித்த ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
எதிராக நின்ற வேதவள்ளி
ஆரம்பத்தில் இருந்தே அன்பு- ஷாலினி காதலுக்கு வேதவள்ளி தடையாகத்தான் இருந்தார். இது தெரிந்தும், இவர்களின் காதலுக்கு கயல், ஷாலினியின் அண்ணன் விக்னேஷ் என எல்லோரும் ஆதரவாகத் தான் இருந்தனர்.
சவால் விட்ட கயல்
அவர்கள் அனைவருமே, அன்பு போலிஸ் ட்ரெயினிங் முடித்து வேலை வாங்கும் வரை காத்திருக்குமாறு மட்டும் தான் கூறினர். அதுமட்டுமில்லாமல், கயல், ஷாலினிக்கு வேறு கல்யாணம் பண்ண ஏற்பாடு செய்ததை அறிந்து, வேதவள்ளியிடமே போய், ஷாலினிக்கும் அன்புவிற்கும் தான் கல்யாணம் நடக்கும். அதை நான் நடத்தியும் காட்டுவேன் என்றெல்லாம் சவால் விட்டார்.
திருட்டுக் கல்யாணம்
இதனால், ஆத்திரமடைந்த வேதவள்ளி, கயலின் அம்மாவிடம் எச்சரித்து அனுப்பினார். இதனால் கயல் அம்மா மனமுடைந்தார். மேலும், ஷாலினியை அன்புவிடம் இருந்து தள்ளி இருக்குமாறும் கூறினார். அதுவரை அமைதியாக இருந்த ஷாலினி அன்பு அம்மா மூலம் வேதவள்ளியின் திட்டத்தை எல்லாம் தெரிந்து கொண்டார்.
இதனால், அவசரத்திலும் பயத்திலும் என்ன செய்வது எனத் தெரியாமல் அன்புவிற்கு போன் செய்து அவரை வரவழைத்து கோயிலில் திருட்டுத் தனமாக கல்யாணம் செய்து கொண்டார்.
ஏங்கும் தேவி
இவர்களின் இந்த செயல் தான் தேவியின் வாழ்க்கையையே கேள்விக் குறியாக்கி வைத்தது. ஆசை ஆசையாய் வளைகாப்பிற்காக காத்திருந்த தேவி, தற்போது விக்னேஷுடன் தன் வாழ்க்கையை கழித்தால் போதும் என்று நினைக்கிறாள். இதனால், ஏங்கி ஏங்கி அவரது உடலும் வீணாகப் போய் வருகிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்