Varalakshmi Sarathkumar: பாலியல் துன்புறுத்தலில் பட்ட வேதனை;பொதுவெளியில் கண்ணைக்கசக்கியது ஏன்? -வரலட்சுமி பேட்டி!
Varalakshmi Sarathkumar: நான் என்னை சுற்றி உள்ளவர்கள் சிறிது மனம் நொந்து இருந்தால் கூட, கண்டுபிடித்து விடுவேன். அவர்களை மகிழ்ச்சிப்படுத்த முயற்சிப்பேன் அல்லது அவர்களுக்கு என்ன பிரச்சினை என்று அவர்களிடமே கேட்டு விடுவேன்.

Varalakshmi Sarathkumar: பாலியல் துன்புறுத்தலில் பட்ட வேதனை;
பொதுவெளியில் கண்ணைக்கசக்கியது ஏன்? -வரலட்சுமி பேட்டி!
Varalakshmi Sarathkumar: வரலட்சுமி சரத்குமார் அண்மையில் கலாட்டா சேனலுக்கு கொடுத்த பேட்டியில், தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான துன்புறுத்தல் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அழுதது ஏன்?
இதுகுறித்து அவர் பேசும் பொழுது, ' டான்ஸ் ஜோடி டான்ஸில் எனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான துன்புறுத்தலை பற்றி பேசும்பொழுது நான் அழுதுவிட்டேன். பொதுவெளியில் மிகவும் தைரியமாக பேசும் நான், அந்த நிகழ்ச்சியில் அழுதுவிட்டேன். நான் அழுதது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருந்தது.