‘இவங்க சாதி இருக்குன்னு சொன்னா.. ஏற்கனவே கொதிச்சு போய்தான் இருக்கு.. நெருப்ப கிளறி விட நான் விரும்பல’ - பாலா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘இவங்க சாதி இருக்குன்னு சொன்னா.. ஏற்கனவே கொதிச்சு போய்தான் இருக்கு.. நெருப்ப கிளறி விட நான் விரும்பல’ - பாலா!

‘இவங்க சாதி இருக்குன்னு சொன்னா.. ஏற்கனவே கொதிச்சு போய்தான் இருக்கு.. நெருப்ப கிளறி விட நான் விரும்பல’ - பாலா!

Kalyani Pandiyan S HT Tamil
Dec 29, 2024 04:52 PM IST

‘இவர்கள் சாதி இருக்கிறது என்று கூறிக் கொண்டால் போதுமா... சாதி என்பது மனிதர்கள் உருவாக்கியது; கொழுக்கட்டை பிடித்தது போல... ஆளாளுக்கு ஒரு கொழுக்கட்டை பிடித்து அதற்கு ஒரு பெயர் வைத்துக் கொண்டார்கள்.’ - பாலா!

‘இவங்க சாதி இருக்குன்னு சொன்னா.. ஏற்கனவே கொதிச்சு போய்தான் இருக்கு?.. நெருப்ப கிளறி விட நான் விரும்பல’ - பாலா!
‘இவங்க சாதி இருக்குன்னு சொன்னா.. ஏற்கனவே கொதிச்சு போய்தான் இருக்கு?.. நெருப்ப கிளறி விட நான் விரும்பல’ - பாலா!

இந்தத்திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், அந்த படம் தொடர்பாக பாலா கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். அதில், அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார். அப்போது அவரிடம் சாதி ரீதியான திரைப்படங்கள் எடுப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

சாதி என்ற ஒன்று இல்லை

அதற்கு பதிலளித்த பாலா, ‘சாதி என்ற ஒன்று இருந்தால்தானே நான் அது பற்றி கருத்து கூற முடியும்.’ என்றார்.

இதையடுத்து சாதி இப்போதும் இருக்கிறதே என்று பதில் கேள்வி கேட்ட பொழுது, ‘இவர்கள் இருக்கிறது என்று கூறிக் கொண்டால் போதுமா... சாதி என்பது மனிதர்கள் உருவாக்கியது; கொழுக்கட்டை பிடித்தது போல... ஆளாளுக்கு ஒரு கொழுக்கட்டை பிடித்து அதற்கு ஒரு பெயர் வைத்துக் கொண்டார்கள்.. மற்றபடி சாதியில் எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை...’ என்று பேசினார்.

தானாக அடங்கட்டும்

இதையடுத்து நீங்கள் ஒரு ஆணித்தரமாக சாதி ரீதியான படம் எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறீர்களா என்று கேட்ட பொழுது, ‘ஏற்கனவே கொதித்துப் போய் தான் இருக்கிறது; இதில் நான் ஒரு படம் எடுத்து, அந்த நெருப்பை கிளறி விட விரும்பவில்லை.. அது தானாக அடங்கட்டும்’ என்று கூறினார்

முன்னதாக பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில் தன்னுடைய பர்சனல் சார்ந்த விஷயங்களைப் பற்றி பேசிய பாலா, ‘‘எனக்கு உடலுக்கு கேடுவிளைவிக்கக்கூடிய சில தவறான பழக்க வழக்கங்கள் இருந்தன. ஒரு கட்டத்தில் நான் அதன் உச்சத்தை தொட்டேன். விளைவு, உடல்நிலை மோசமாகி நிலைதடுமாற ஆரம்பித்து விட்டேன். என் குடும்பத்தினர், இன்னும் கொஞ்ச நாட்கள்தான் இருக்கப்போகிறான். அவன் இஷ்டப்படி இருந்து விட்டு போகிறான் என்று பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

7 நாட்கள் தூக்கம்

ஒரு முறை உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் என்னை அனுமதித்திருந்த போது, போதையில் கிட்டத்தட்ட 7 நாட்கள் தூங்கிக்கொண்டே இருந்தேன். நான் விழித்த பார்த்த போது என்னிடம் அதைச் சொன்னார்கள். அந்த நேரம்தான் இந்த சனியனை எப்படியாவது விட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.

இதற்கிடையே, வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி வந்தது. படிப்பு பெரிதாக இல்லை. அப்போது, சினிமாவில் யார் வேண்டுமென்றாலும் சேரலாம்; உழைப்பு மட்டும் இருந்தால் போதும் என்பது தெரிந்தது. இதையடுத்துதான் நான் சினிமாவிற்கு முயற்சி செய்தேன். பாலு மகேந்திராவிடம் தான் சேர வேண்டும் என்று கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக போராடி, அவருடன் உதவி இயக்குனராக சேர்த்தேன்.

சினிமாவிற்கு சேரும் பொழுது நாய் படாத பாடு பட போகிறேன் என்று நினைத்தேன். என் நண்பனிடம் இதுகுறித்து கேட்டேன். அவன் நீ நாய் படாத பாடு பட மாட்டாய்; சொறி நாய் படாத பாடு படுவாய் என்றான்; உண்மையில் நிலைமை அதைவிட மோசமாக இருந்தது.’ என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.