பாலா போட்ட பாலம்;ஒரு பக்கம் வைத்து தைக்கப்பட்ட கண்; சரத்குமார் வன்மம்; ஒட்டிக்கொண்ட அந்த பழக்கம்! - விஷால் என்ன ஆனார்?
ஒரு கட்டத்தில் அது மிகவும் கொடூரமான ஒற்றைத் தலைவலியாக மாறியது; இதை மறப்பதற்காக அவர் சில பழக்கங்களுக்கு அடிமையானார்; அதுதான் அவரை இன்று இந்தக்கட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.

பாலா போட்ட பாலம்;ஒரு பக்கம் வைத்து தைக்கப்பட்ட கண்; சரத்குமார் வன்மம்; ஒட்டிக்கொண்ட அந்த பழக்கம்! - விஷால் என்ன ஆனார்?
மதகதராஜா பட விழாவில் விஷால் கை நடுக்கத்துடன், உடல் நலக்குறைவுடன் பேசினார். இது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அது குறித்து வலைப்பேச்சு அந்தணன் தன்னுடைய யூடியூப்பில் பேசி இருக்கிறார்.
காரணம் பாலா
இது குறித்து அவர் பேசும் போது, ‘ விஷாலின் இந்த நிலைமைக்கு மிக முக்கிய காரணம் இயக்குநர் பாலா. பாலா என்ன சொன்னாலும் செய்வோம் என்று ஹீரோக்கள் சொன்ன காலம் உண்டு. காரணம், அவர் படத்தில் நடித்தால், திரைத்துறையில் மிகப்பெரிய திருப்பு முனை கிடைக்கும் என்று பலரின் நினைப்பாக இருந்தது.
அந்த சமயத்தில்தான் அவன் இவன் படத்தில் பாலாவுடன் இணைந்தார் நடிகர் விஷால்; அந்த படத்தில் அவர் மாற்றுத்திறனாளியாக மாறுகண் வைத்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.