Sivakarthikeyan: விஜய் அஜித் இடமே குறி; கழுத்தை நெறித்த 87 கோடி கடன் பத்திரங்கள்; விட்டுச் சென்ற நட்பு; சிவா எழுந்த கதை!
சினிமாவில் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது ஆர் டி ராஜா சிவகார்த்திகேயனை அஜித் விஜய்க்கு சமமாக கொண்டு வர முயற்சிகளை எடுத்தார்.

சிவகார்த்திகேயன் நீண்ட வருடங்களாக கடனில் சிக்கித்தவிக்கிறார் என்ற பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், அதன் பின்னணி குறித்து வலைப்பேச்சு அந்தணன் தமிழ்நாடு டைம்ஸ் சேனலுக்கு அண்மையில் பேசி இருக்கிறார்
இது குறித்து அவர் பேசும் போது, “முதலில் இந்த படத்தை துவங்கியது தயாரிப்பாளர் ஆர் டி ராஜா தான். இந்த ஆடி ராஜா விஜய் தொலைக்காட்சியில் வேலை பார்த்தவர். அப்போது சிவகார்த்திகேயனோடு இவருக்கு நட்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இருவரும் ஒன்றாக விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெளியே வரும் பொழுது, ஆடி ராஜா சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் வழிகாட்டுதலாக இருந்தார்.
சிவகார்த்திகேயனை பொறுத்தவரை அவர் சினிமாவுக்குள் நுழையும் பொழுது, அவருக்கு ஒரு காமெடியனாக நகர்ந்து சென்று விட வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்தது. ஆனால் ஆடி ராஜா சிவகார்த்திகேயனை நீ ஒரு ஹீரோ மெட்டீரியல்.. ஆகையால் நீ சின்ன சின்ன கேரக்டர்களையெல்லாம் செய்யாதே என்று சொல்கிறார்.