ஜெயிலர் வசூலை வேட்டையன் தொடாது.. ஆனால்.. அரசு செய்யும் கெடுபிடிகள்.. வலைப்பேச்சு அந்தணன் பரபரப்பு பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஜெயிலர் வசூலை வேட்டையன் தொடாது.. ஆனால்.. அரசு செய்யும் கெடுபிடிகள்.. வலைப்பேச்சு அந்தணன் பரபரப்பு பேட்டி

ஜெயிலர் வசூலை வேட்டையன் தொடாது.. ஆனால்.. அரசு செய்யும் கெடுபிடிகள்.. வலைப்பேச்சு அந்தணன் பரபரப்பு பேட்டி

Marimuthu M HT Tamil Published Oct 14, 2024 11:08 PM IST
Marimuthu M HT Tamil
Published Oct 14, 2024 11:08 PM IST

ஜெயிலர் வசூலை வேட்டையன் தொடாது.. ஆனால்.. அரசு செய்யும் கெடுபிடிகள்.. வலைப்பேச்சு அந்தணன் பரபரப்பு பேட்டி

ஜெயிலர் வசூலை வேட்டையன் தொடாது.. ஆனால்.. அரசு செய்யும் கெடுபிடிகள்.. வலைப்பேச்சு அந்தணன் பரபரப்பு பேட்டி
ஜெயிலர் வசூலை வேட்டையன் தொடாது.. ஆனால்.. அரசு செய்யும் கெடுபிடிகள்.. வலைப்பேச்சு அந்தணன் பரபரப்பு பேட்டி

இதுதொடர்பாக வலைப்பேச்சு அந்தணன் ஆகாயம் தமிழ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘’ஜெய்பீமில் அவ்வளவு டீட்டெய்லிங் இருக்கும். வேட்டையன் படத்தில் வில்லனை ஒரு பாஸ்பாஸை வைத்து பிடிக்கக் காரணம், அது பாஸிங் சீன் தான். ராணாவை நோக்கி தான் கதைப் பயணிக்குது.

ரஜினிகாந்த், அக்டோபர் 16-ல் மீண்டும் சூட்டிங் ஸ்பாட்டில் கலந்துகொள்வார் என லோகேஷ் கனகராஜ் சொல்லியிருக்கிறார். எப்படியும் இந்த மாசம் போயிடும்.

நவம்பரில் இருந்து தான் சூட்டிங் ஸ்பாட்டில் கலந்துகொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. எனக்கு இது ஜெயிலர் அளவுக்குப் போகுமா அப்படிங்கிற நம்பிக்கை இல்லை. ஜெயிலருடைய ஃபிளேவரே வேற. அந்தளவுக்கு இது இல்லை. ஆனால், வேட்டையன் படம் குறை சொல்லும்படியும் இல்லை.

’ஜெயிலரின் கலெக்‌ஷனை தொடமுடியாது’

அதனால், ஜெயிலரின் கலெக்‌ஷனை தொட வாய்ப்புகள் குறைவு தான். லைகா புரொடக்‌ஷன் காப்பாற்றப்படும். நிச்சயமாக, வேட்டையன் படத்துக்கு நெகட்டிவ் ரிப்போர்ட்டே இல்லை. அதிகமான பாஸிட்டிவ் ரிவியூஸ் தான். ரஜினி ரசிகர்கள் படம் எப்படியிருந்தாலும் கொண்டாடுவாங்க. அதைத்தாண்டி, நடுநிலையானவர்கள் படத்தைப் பார்த்துட்டு நல்லாயிருக்குன்னு தான் சொல்றாங்க.

அப்போது குடும்பங்கள் உள்ளே வர ஆரம்பிச்சுடும். ஐந்து நாட்கள் லீவு வேறு இருக்கு. நிச்சயம் இந்த படம் லைகாவுக்கு நிச்சயம் பூஸ்ட்டாக தான் இருக்கும்.

ரஜினியின் படத்துக்கு முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர்களின் செலிபிரேஷனுக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டு சரியாக நடந்தது. விஜய்க்கு பட ரிலீஸாகிறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி தான் நடந்தது. சென்னை கார்ப்பரேஷன் கோட் படத்துக்கு, விஜய்யின் கட்-அவுட்களை எடுத்துட்டுப் போனாங்க. நான் காசி தியேட்டர் வழி வரும்போதே பார்த்தேன். ரஜினிக்கு எக்கச்சக்க பேனர்கள் வைக்க அனுமதிச்சிருக்காங்க, விஜய்க்கு அதை செய்யலன்னு சொல்லிட்டுதான் வந்தேன். ஓரவஞ்சனை என்பது வெளிப்படையாகவே தெரியுது. பத்து ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்த கட்சி, மக்களுடைய நம்பிக்கையை சம்பாதிக்க முயற்சிக்கணும். இந்த மாதிரி விஷயங்களைப் பொருட்டாக நினைக்கக் கூடாது.

’அரசு விஜய்க்கு செய்யும் ஓரவஞ்சனை’:

சினிமா என்பது ஒரு பொழுதுபொக்கு சம்பந்தப்பட்ட வேலை. யாராவது ஏதாவது பண்ணிட்டுப் போகட்டும். சட்டத்துக்கு உட்பட்டு எதை செய்யமுடியுமோ, அதைச் செய்வோம். நமக்கு வேணும்கிறவங்களுக்கு ஒரு நியாயம், வேணாம்கிறவங்களுக்கு ஒரு நியாயம் அப்படிங்கிறதை ஏத்துக்க முடியாது. அதுதான் இந்த விஷயத்தில் நடந்து இருக்கு.

விஜய் கட்சி ஆரம்பிக்கப்போறாருன்னு தெரிஞ்சதும் பேனரை அங்க வைக்கக் கூடாது, இங்க வைக்கக் கூடாதுன்னு கட்டுப்பாடுகள் விதிக்கிறதும், ரஜினி படம் என்று வரும்போது கண்டுகொள்ளாமல் விடுவதும் ஏற்றுக்கொள்ளமுடியாத விஷயம் தான்.

நெருடலாக தான் இருந்தது. வேட்டையன் பட ரிலீஸின்போது, ஒருத்தன் காக்காவை தெர்மாகோலில் செய்து சுடுற மாதிரி வைச்சிருக்கான் என்றால், அவனோட அறிவு என்ன மாதிரி இருக்கும். அது முட்டாள்தான் பண்ணியிருப்பாங்க.

ரஜினியின் படங்களில் விஜய் கேமியோ செய்வதற்கு எல்லாம் வாய்ப்பே கிடையாது. அந்த இடத்தை ரஜினி இனிமேல் கொடுக்கமாட்டார். இதே விஜய், ரஜினியை சூப்பர் ஸ்டாராக நினைத்துக் கொண்டாடிய காலத்தில் வேண்டுமென்றால், அது நடந்திருக்கலாம். இன்றைக்கு நமக்கு சமமானவர் ரஜினி என விஜய் நினைக்க ஆரம்பிச்சிட்டார். அது பல இடங்களில் ரஜினியை உறுத்தியிருக்கு. அதன் காரணமாகத்தான்,காக்கா கழுகு கதையெல்லாம் சொன்னது. தன்னால் விஜய்க்கு ஒரு பலன் கிடைப்பதை ரஜினி விரும்பமாட்டார். இதனால், எதிர்காலத்தில் நடக்க வாய்ப்பே இல்லை’’எனக் கூறினார்.

நன்றி: ஆகாயம் சினிமாஸ்

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.