‘ பழி என்மீதே வருகிறது என்ன செய்ய?'.. பாடல் வரிகளை மாற்ற மறுப்பு குற்றச்சாட்டிற்கு வைரமுத்து விளக்கம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘ பழி என்மீதே வருகிறது என்ன செய்ய?'.. பாடல் வரிகளை மாற்ற மறுப்பு குற்றச்சாட்டிற்கு வைரமுத்து விளக்கம்!

‘ பழி என்மீதே வருகிறது என்ன செய்ய?'.. பாடல் வரிகளை மாற்ற மறுப்பு குற்றச்சாட்டிற்கு வைரமுத்து விளக்கம்!

HT Tamil HT Tamil Published Jun 19, 2025 02:33 PM IST
HT Tamil HT Tamil
Published Jun 19, 2025 02:33 PM IST

‘வானத்தைப் பார்த்தேன்; பூமியைப் பார்த்தேன்’ என்றொரு பாடல் “குரங்கிலிருந்து பிறந்தானா குரங்கை மனிதன் பெற்றானா யாரைக் கேள்வி கேட்பது டார்வின் இல்லையே” என்று எழுதியிருந்தேன். - வைரமுத்து!

 ‘ பழி என்மீதே வருகிறது என்ன செய்ய?'.. பாடல் வரிகளை மாற்ற மறுப்பு குற்றச்சாட்டிற்கு வைரமுத்து விளக்கம்!
‘ பழி என்மீதே வருகிறது என்ன செய்ய?'.. பாடல் வரிகளை மாற்ற மறுப்பு குற்றச்சாட்டிற்கு வைரமுத்து விளக்கம்!

அந்தப்பதிவில், ‘என்மீது ஒரு பழிஉண்டு

பாடல்களில் திருத்தம் கேட்டால் செய்யமாட்டேன் என்று

அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது

திருத்தத்திற்கு ஒரு கருத்தமைதி வேண்டும்.

இருந்தால், அதற்கு நான் உடனே உடன்படுவேன்;

மாற்றியும் கொடுப்பேன்; கொடுத்திருக்கிறேன்

புன்னகை மன்னன் படத்தில் நடந்த சம்பவம்

புன்னைகை மன்னன் படத்தில்

‘வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்’ என்றொரு பாட்டு

மழையில் நனையும் ஒரு மான்குட்டி தன் கவிதையால் மழையைக் குளிப்பாட்டும் பாட்டு

‘மழைத்துளி தெறித்தது

எனக்குள்ளே குளித்தது

நினைத்தது பலித்தது

உயிர்த்தலம் சிலிர்த்தது’

என்று எழுதியிருந்தேன்

‘உயிர்த்தலம் என்பதை மட்டும்

மாற்றிக்கொடுங்கள்’ என்றார் இசையமைப்பாளர்

ஏன் என்றேன்?

‘நீங்கள் எழுதிய பொருளில்

புரிந்துகொள்ளாமல்

அதைப் பெண்ணுறுப்போடு

சம்பந்தப்படுத்திப்

பிரச்சினை செய்வார்கள்’ என்றார்

சிந்தித்தபோது

சரியென்றே பட்டது

நான் உடனே

‘நினைத்தது பலித்தது

குடைக்கம்பி துளிர்த்தது’

என்று மாற்றிக்கொடுத்தேன்

இதில் நியாயம் இருக்கிறது

இன்னொரு படம் மனிதன்

அதில்

‘வானத்தைப் பார்த்தேன்; பூமியைப் பார்த்தேன்’

என்றொரு பாடல்

“குரங்கிலிருந்து பிறந்தானா

குரங்கை மனிதன் பெற்றானா

யாரைக் கேள்வி கேட்பது

டார்வின் இல்லையே”

என்று எழுதியிருந்தேன்.

இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின்

உதவியாளர் லட்சுமி நாராயணன்

என் காதோடு வந்து

‘டார்வின் என்பதை மட்டும்

மாற்றுங்கள்; அது எல்லாருக்கும் புரியாது’ என்றார்

நான் புன்னகையோடு சொன்னேன்:

‘தெரிந்ததை மட்டும் சொல்வதல்ல பாட்டு;

தெரியாததைச் சொல்லிக் கொடுப்பதும் பாட்டு’

என்று மாற்ற மறுத்துவிட்டேன்

எஸ்.பி.முத்துராமனிடம் சென்று

நான் சொன்னதைச் சொல்லியிருக்கிறார்.

அவரும் இதற்குமேல் வற்புறுத்த வேண்டாம் என்று

வருத்தத்தோடு விட்டுவிட்டார்.

டார்வின் பேசப்பட்டது

இப்படி

நியாயமான பொழுதுகளில்

மாற்ற மறுத்திருக்கிறேன்

பாட்டுவரியின் திருத்தத்தைப்

பொருளமைதியே தீர்மானிக்கிறது;

நானல்ல..

ஆனால் பழி

என்மீதே வருகிறது

என்ன செய்ய?

ஓரங்கட்டப்பட்ட வைரமுத்து

தமிழ் சினிமாவில் சீராக பயணித்து வந்த வைரமுத்து மீது சின்மயி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதன் பின்னர் அவருக்கு வரும் பாடல்களின் வாய்ப்பு குறைந்தது.

அத்துடன் மட்டுமல்லாமல், மணிரத்னம் - வைரமுத்து - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியும் முறிந்தது. பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் பட விழாக்களிலும் அவர் நிராகரிக்கப்பட்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வைரமுத்து மீது சுஜித்ராவும் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். ஆனால், எதற்கும் ரியாக்ட் செய்யாத வைரமுத்து, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.