‘உதயநிதி கூட ஒப்பிடாதீங்க.. விஜய்க்கு அங்கீகாரமே இல்லை’ வாகை சந்திரசேகர் அதிரடி பேட்டி!
‘உடனே எழுந்து வந்த கலைஞர், ‘எனக்கு வழுக்கை வந்ததற்கு தமிழ்வாணன் வருத்தப்படுகிறார். எனக்கு வருத்தமில்லை..’

நடிகரும், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் நாட்டுப்புற கலைகள் நலவாரியத் தலைவருமான வாகை சந்திரசேகர், பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பல சுவாரஸ்ய நிகழ்வுகளை பேசியிருக்கிறார். இதோ அந்த பேட்டி:
‘‘40 ஆண்டுகளாக சினிமாவிலும், அரசியலிலும் இருக்கிறேன். பெரிய பொழுதுபோக்கு என்று எனக்கு எதுவும் இல்லை. இளைஞரா இருந்த போது, நண்பர்கள் இருந்தார்கள். அதுக்குப் பின் நண்பர்கள் கிடையாது. எனக்கு பெரிய பொழுதுபோக்கும், ரிலாக்ஸூம் வீடு தான்.
சினிமா, அரசியல், பொதுவாழ்க்கை டென்ஷன் எல்லாம் தாண்டி, வீட்டு வந்தால் தான் ரிலாக்ஸ் கிடைக்கும். எனக்கு சின்ன வயதிலிருந்தே ஆழ்ந்த இறை நம்பிக்கை உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவன். திராவிட கொள்கையின் தீவிர தொண்டன் என்றும் என்னை சொல்ல முடியாது; அதே நேரத்தில் தீவிரமான பக்திமான் என்றும் கூற முடியாது.