சிம்பு படத்தால் எனக்கும் தனுஷூக்கும் விரிசலா? - வீடியோ விட்டு விளக்கம் கொடுத்த வெற்றிமாறன்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சிம்பு படத்தால் எனக்கும் தனுஷூக்கும் விரிசலா? - வீடியோ விட்டு விளக்கம் கொடுத்த வெற்றிமாறன்!

சிம்பு படத்தால் எனக்கும் தனுஷூக்கும் விரிசலா? - வீடியோ விட்டு விளக்கம் கொடுத்த வெற்றிமாறன்!

Kalyani Pandiyan S HT Tamil
Updated Jun 30, 2025 11:06 AM IST

வாடிவாசல் திடைப்படத்தை பொறுத்த வரை நடிகர்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பிற்காக சில வேலைகள் செய்ய வேண்டி இருக்கிறது. அதே போல எழுத்து பணிக்கும் நேரம் தேவைப்படுகிறது.

சிம்பு படத்தால் எனக்கும் தனுஷூக்கும் விரிசலா? - வீடியோ விட்டு விளக்கம் கொடுத்த வெற்றிமாறன்!
சிம்பு படத்தால் எனக்கும் தனுஷூக்கும் விரிசலா? - வீடியோ விட்டு விளக்கம் கொடுத்த வெற்றிமாறன்!

இது குறித்து அவர் பேசும் போது, ‘சிலம்பரசனும் நானும் இணையும் திரைப்படம் வடசென்னை 2 வா என்ற பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அது வடசென்னை 2 திரைப்படம் கிடையாது. தனுஷ் நடிக்கும் ‘அன்புவின் எழுச்சி’ தான் வடசென்னை 2 திரைப்படம்.

சிம்புடன் இணையும் திரைப்படம்?

ஆனால், இந்தப்படம் வடசென்னையை சுற்றி நடக்கும் திரைப்படம். வட சென்னையில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் மற்றும் சின்ன சின்ன விஷயங்கள் இந்தப்படத்திலும் இடம் பெறும். இந்தத்திரைப்படம் அதே காலகட்டத்தில் நடக்கக்கூடிய திரைப்படம் தான்.

தனுஷ்தான் எல்லாவற்றிற்கும் உரிமையாளர்

வடசென்னை திரைப்படத்தின் ஒட்டுமொத்த உரிமையாளர் தனுஷ்தான். அப்படி இருக்கும் பொழுது அது தொடர்பான கதாபாத்திரங்களையோ காட்சிகளையோ அல்லது இன்ன பிற விஷயங்களையோ நாம் பயன்படுத்தும் பொழுது அவருக்கு அதற்கான பணத்தைக் கொடுத்தாக வேண்டும்.

அதை கேட்பதற்கு அவருக்கு முழு உரிமை இருக்கிறது. அதை நாம் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டிய அவசியமே கிடையாது. நானும் சிலம்பரசனும் தயாரிப்பாலர் தாணு சாரும் சந்தித்த அடுத்த நாளே நான் தனுஷிடம் இருகுறித்து பேசினேன்.

என்னால் எப்படி வேண்டுமென்றாலும் செய்ய முடியும்

அவரிடம் இந்தப்படத்தை என்னால் தனியாகவும் செய்ய முடியும். அப்படி இல்லை என்றால் வட சென்னையில் உள்ள கதாபாத்திரங்களை இதில் உட்பகுத்தியும் செய்ய முடியும். அந்த முடிவு உங்களுடையது என்று நான் கூறினேன். ஆனால் தனுஷ் அதைப்பற்றி எல்லாம் நீங்கள் எதையும் நினைக்காதீர்கள்.

உங்களுக்கு எது சௌகரியமாக இருக்கிறதோ அதை நீங்கள் செய்யுங்கள் என்றார். மேலும் நான் என்னுடைய குழுவிடம் சொல்லிவிடுகிறேன். ஆட்சேபனை இல்லை என்பதற்கான சான்றிதழையும் கொடுத்து விடுகிறேன். அதற்காக எந்த வித பணமும் தேவையில்லை என்றார்.

வாடிவாசல் நிலை என்ன?

வாடிவாசல் திடைப்படத்தை பொறுத்த வரை நடிகர்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பிற்காக சில வேலைகள் செய்ய வேண்டி இருக்கிறது. அதே போல எழுத்து பணிக்கும் நேரம் தேவைப்படுகிறது. யூடியூப்பில் தனுஷூக்கும் எனக்குமான உறவு குறித்து பல்வேறு வதந்திகள் உலாவுகின்றன.

தனுசுக்கும் எனக்குமான உறவு இது போன்ற விஷயங்களாலோ அல்லது ஒரு படத்தாலோ உடையக்கூடிய உறவு கிடையாது. அவர் நான் எப்பொழுதும் என்னுடைய கிரியேட்டிவ் உலகில் சுதந்திரமாக இருக்கிறேனா என்பதை உறுதி செய்வார்.

அண்மையில் ஒரு படத்தில் எனக்கு பணம் நெருக்கடி வந்தது. அந்த சமயத்தில் அவர் இன்னொரு தயாரிப்பாளரிடம் இருந்து அட்வான்ஸ் வாங்குவதற்கு உதவிகரமாக இருந்தார்.’ என்று பேசினார்.