Meera Jasmine: கைவிட்ட காதலன்.. தவிக்கவிட்ட கணவன்.. விவாகரத்து பத்திரம் வாங்கிய மீரா! - மீராவின் மீளா துயர்!
மீரா ஜாஸ்மின் பர்சனல் தொடர்பான விஷயங்கள் குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்த தகவல்கள் இவை!

மீரா ஜாஸ்மினுக்கு கேரளாதான் பூர்வீகம். சினிமா குடும்பம் தான். ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது ஜாஸ்மினை சந்தித்த இயக்குநர் ஒருவர் மிகவும் க்யூட்டாக இருக்கிறாரே என்று சொல்லி அவரை ஒரு சின்ன காட்சியில் நடிக்க வைத்தார். அப்படித்தான் மீரா ஜாஸ்மின் திரைத்துறைக்குள் நுழைந்தார்.
ரன் கொடுத்த பிரேக்!
அதன் பின்னர் அவர் மலையாளத்தில் ஒரு சில படங்கள் நடித்தார். ஆனால் அந்த படங்கள் எதுவும் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதன் பின்னர் தான் மீரா ஜாஸ்மினுக்கு தமிழில் ரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
முதலில் அவர் நடித்த கதாபாத்திரத்தில் இந்தி நடிகை வித்யா பாலன் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் பிஸியாக இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை; அதனைத் தொடர்ந்து அந்த கதாபாத்திரத்தில் நடிகை ரீமாசென் கமிட் ஆனார். ஆனால் அவருக்கு அந்தத்திரைப்படத்தில் பெரிதாக ஈடுபாடு இல்லை. ஒரு கட்டத்தில் அந்தப்படத்தில் இருந்து ரீமா விலகி விட்டார்.
இதனையடுத்து தான் அந்த திரைப்படத்தில் மீரா ஜாஸ்மின் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய பிரேக்காக அமைந்தது. அவருக்கு மட்டுமல்ல அந்தப்படத்தில் நடித்த மாதவனுக்கும், அந்தப் படத்தை இயக்கிய லிங்குசாமிக்கும் அந்த படம் திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம். அதன் பின்னர் மீரா ஜாஸ்மினுக்கு வாய்ப்புகள் கதவை தட்டின.
காதலால் வந்த வினை:
புதிய கீதை, மீண்டும் லிங்குசாமி உடன் சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்தார். சண்டக்கோழி திரைப்படம் மீரா ஜாஸ்மினுக்கு ஒரு டிரேடு மார்க் படம் என்று சொல்லலாம். இப்படி அடுத்தடுத்து பெரிய இடங்களுக்கு சென்று கொண்டிருந்த மீரா ஜாஸ்மின் திடீரென்று ஒரு நாள் பொத்தென்று என்று கீழே விழுந்தார். அதற்கு காரணம் அவரது காதல். அந்த காதல் யாருடன் ஏற்பட்டது என்றால் அது ஒரு மாபெரும் இசை கலைஞரோடு. ஆம் அவர் வேறு யாரும் இல்லை மேண்டலின் ஶ்ரீ நிவாஸ் தான்.
அந்த காதல் நெடு நாட்களாக ஓடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். ஆனால் அதன் பின்னர் மீரா ஜாஸ்மின் நடவடிக்கைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. குறித்த நேரத்தில் படபிடிப்புக்கு வராமல் இருப்பது, கால்சீட் குழப்பங்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகள் என பல புகார்கள் எழுந்தன.
கடந்த 2008 ஆம் ஆண்டு மலையாளத்தில் நடிகர் திலீப்புடன் மீரா ஜாஸ்மின் ஒரு படம் நடித்தார். அந்தத் திரைப்படம் தடை செய்யப்பட்டது. அந்த தடை தனக்கு தெரியாது என்று சொல்லி மீரா ஜாஸ்மின் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். இதை தெரிந்து கொண்ட தயாரிப்பாளர் சங்கமும் இயக்குநர் சங்கமும் கடுமையாக கோபம் அடைந்து, நடிப்பதற்கு தடை விதித்து விடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
அந்த சமயத்தில் அவர் இன்னொரு பிரச்சினையையும் சந்தித்தார். அது என்னவென்றால் கேரளாவில் உள்ள ஒரு கோயிலில் இந்துக்கள் மட்டுமே வழிபடக்கூடிய முறை இருக்கிறது. ஒரு முறை மழை பெய்து கொண்டிருந்த பொழுது அந்த கோயிலில் மீரா ஜாஸ்மின் மற்றும் இயக்குநர் ஒருவர் ஒதுங்கினர். அப்போது அந்த கோயில் மிக நன்றாக இருக்கிறது என்று சொல்லி மீரா ஜாஸ்மின் அந்த கோயிலில் சென்று வழிபட்டு விட்டார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.
கிட்டத்தட்ட ஒரு மதப் பிரச்சினையாகவே மாறியது. அதற்காக மீரா ஜாஸ்மினுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் இரண்டும் கலந்து எழுந்தன. மீரா ஜாஸ்மின் மீது இரண்டு புகார்கள் இருக்கின்றன. ஒன்று அவர் திமிரு பிடித்து நடிகை என்பது இன்னொன்று அவர் கொஞ்சம் மனநலம் சரியில்லாமல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே அனில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டு மீரா சினிமாவே தனக்கு வேண்டாம் என்று சொல்லி துபாயில் செட்டில் ஆனார். அந்த உறவும் தற்போது கசந்து விட மீண்டும் படங்களில் நடிக்க வாய்ப்புத்தேடிக்கொண்டிருக்கிறார்” என்று பேசினார்.
நன்றி: அறம் செய்

டாபிக்ஸ்