விவாகரத்து ஆனா என்ன?.. அப்பாட்ட போ.. அனுப்பி வைத்த சைந்தவி.. மகளை அணைத்துகொண்ட ஜீவி பிரகாஷ்
சைந்தவி பத்திரமாக ஜிவி பிரகாஷிடம் குழந்தையை அனுப்பி வைத்தார். மேலே வந்த குழந்தையை ஜிவி பிரகாஷ் பாதுகாப்பாக கட்டி அணைத்துக்கொண்டார்.
ஜிவி பிரகாஷூம், சைந்தவியும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக கூறி அறிக்கை வெளியிட்டனர். இது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் குமார் அண்மையில் நடத்திய இசைக்கச்சேரியில் சைந்தவி பாட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
பர்சனல் வாழ்க்கையில் வித்தியாசம்
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஜிவி பிரகாஷ் நடத்திய இசைக்கச்சேரியில் சைந்தவி இணைந்து பாடுவதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து மகிழ்ச்சியை சைந்தவி வெளிப்படுத்தியும் இருந்தார்.
இதன் மூலம், பர்சனல் வாழ்க்கையில் வித்தியாசம் இருந்தாலும், தொழில் ரீதியாக இருவரும் ஒருவர் கூறுவர் மரியாதையோடு நடந்து கொள்கிறார்கள் என்று கமெண்ட்கள் வந்தன.
பிறை தேடும் இரவிலே
குறிப்பாக, இசைக்கச்சேரியில் இருவரும் இணைந்து "பிறை தேடும் இரவிலே" பாடலை ஒன்றாக சேர்ந்து பாடிய போது ரசிகர்கள் அனைவரும் மிகவும் எமோஷனல் ஆகினர்.
பொதுவாக, சைந்தவியும் ஜிவி பிரகாஷ் குமாரும் இணைந்து பாடிய எல்லா பாடல்களுமே ஹிட் அடித்த நிலையில், மயக்கம் என்ன படத்தில் இருவரும் இணைந்து பாடிய பிறை தேடும் பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதற்குக் காரணம், மிகவும் வலிமையான ஒரு மனைவி, தன்னுடைய கணவனை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் அவனது லட்சியத்திற்காக போராடுவாள் என்பதை கருவாக வைத்து, அந்த பாடலை அந்த படத்தின் இயக்குநர் செல்வராகவன் காட்சிப்படுத்தியிருந்தார். அதனாலேயே அந்த பாடல் ரசிகர்களிடம் மிகவும் கனெக்ட் ஆனது. இது தொடர்பான வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது.
இந்த நிலையில் தற்போதும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஜிவி பிரகாஷ் குமார் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, அவரின் குழந்தை மேடைக்கு வரவேண்டும் என்று சொல்ல, சைந்தவி பத்திரமாக ஜிவி பிரகாஷிடம் குழந்தையை அனுப்பி வைத்தார். மேலே வந்த குழந்தையை ஜிவி பிரகாஷ் பாதுகாப்பாக கட்டி அணைத்துக்கொண்டார்.
கண்ணில் கண்ணீர்..
விவகாரத்திற்கு பிறகு இருவரும் பிறை தேடும் பாடலை இணைந்து பாடியிருப்பது குறித்து
ரசிகர்கள் பல்வேறு விதமான கமெண்ட்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
அதில் பயனர் ஒருவர், பிறை தேடும் பாடலைப் பாடும் பொழுது இருவரது கண்ணிலும் கண்ணீர் வந்திருப்பதாக பதிவிட்டு இருந்தார்.
இன்னொரு பதிவர், விவாகரத்திற்கு பிறகு பிறை தேடும் பாடலைப் பாடுவது மிகவும் கடினமான ஒன்று என்று பதிவிட்டு இருந்தார்
மற்றொருவர், பிறை தேடும் பாடலை சைந்தவியும் ஜிவி பிரகாஷும் இணைந்து பாடுவதை கேட்பது எப்போதுமே தன்னுடைய ஃ பேவரைட் நிகழ்களில் ஒன்று என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த நிகழ்வு தன்னுடைய பேவரைட் என்று குறிப்பிட்டு இருக்கிறார் அத்தோடு தன்னுடைய உடைந்த இதயத்தையும் அதில் இணைந்து இருந்தார்.
முன்னதாக விவாகரத்து ஜிவி பிரகாஷ்குமார் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
இது குறித்து அவர்கள் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “ ஒருவருக்கொருவர் மேல் இருக்கும் பரஸ்பர மரியாதையை பேணுவதின் வாயிலாக, எங்களின் மன அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக, நீண்ட யோசனைகளுக்கு பிறகு, 11 வருட திருமணவாழ்க்கையை முடித்துக்கொண்டு,
அவரவர் பாதைகளில் செல்ல முடிவெடுத்து இருக்கிறோம். எங்களது இந்த தனிப்பட்ட மாற்றத்தை ஊடகங்கள், ரசிகர்கள், நண்பர்கள் புரிந்துகொண்டு, எங்களது தனிப்பட்ட விவகாரத்திற்கு மதிப்பளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டு இருந்தார்.
பொறுப்பு துறப்பு,
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்