Tamil Serial Actor: ‘சீரியலின் பிதாமகன்.. டபுள் செஞ்சுரி அடித்த பூவிலங்கு மோகன்’ யார் இவர்? முழு விபரம் இதோ!
Unforgotten Tamil Serial Actor: சினிமாவில் அறிமுகமானாலும் சின்னத்திரை தான் எனது திறமையை வெளிக்காட்டியது என்று கூறியிருக்கிறார் நடிகர் பூவிலங்கு மோகன். 200க்கும் அதிகமான சீரியலில் நடித்த இவர் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சித்தி, மர்மதேசம் போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

முரளி ஹீரோவாக நடித்த பூவிலங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் பூவிலங்கு என்ற அடைமொழியுடன் பெயரை பெற்றவர் நடிகர் பூவிலங்கு மோகன். இந்த படத்துக்கு முன்னரே பாலசந்தர் இயக்கிய தண்ணீர் தண்ணீர், பொய்க்காலம் குதிரை படங்களில் மோகன் என்ற பெயரில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்திருந்தாலும், படங்களை காட்டிலும் டிவி சீரியல்கள் மூலம் தமிழ் மக்களின் வீடுகளில் குடிபெயர்ந்தவராக இருந்துள்ளார்.
சிறந்த துணை நடிகர்
1980களில் சினிமாக்களில் நடித்து வந்த பூவிலங்கு மோகன் ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரங்களில் இரண்டாவது ஹீரோ அல்லது துணை நடிகராக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளார். பல படங்களில் பரிதாபத்துக்குரிய கேரக்டர்களில் தோன்றி முத்திரை பதித்த நடிகராக இருந்து வந்துள்ளார்.