Udit Narayan: கொளுந்து விட்டு எரிந்த தீ.. “மனதை பாதித்த சம்பவம்.." 11வது மாடியில் இருந்து எஸ்கேப் ஆன உதித் நாரயணன்
Singer Udit Narayan Escapes Fire Accident: பாடகர் உதித் நாரயணன் தீ விபத்து ஏற்பட்ட பிளாட்டில் ஏ விங்க் கட்டிடத்தில் வசித்துள்ளார். பி விங்க் கட்டிடத்தில் விபத்து ஏற்பட்ட போதிலும், இதை நேரில் பார்த்த தனக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியதாக படபடப்பு குறையாமல் சம்பவம் குறித்து கூறியுள்ளார்.

பாலிவுட் சினிமாவில் பிரபல பின்னணி பாடகராக இருப்பவர் உதித் நாரயணன். தமிழில் மாதவன் நடித்த ரன் படத்தில் இடம்பிடித்திருக்கும் சூப்பர் ஹிட் பாடலான காதல் பிசேசே பாடல் மூலம் ரசிகர்களின் மனதை கவரந்த பாடகராக மாறினார். இது தவிர தமிழில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை இவர் பாடியுள்ளார்.
மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் ஒபராய் காம்பிளஸ் அப்பார்மெண்டில் உதித் நாரயணன் வசித்து வருகிறார். இதையடுத்து 13 மாடி கட்டிடங்கள் கொண்ட அந்த கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பார்மெண்டில் உள்ள பி விங்க் கட்டிடடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதற்கிடையே ஏ விங் கட்டிடத்தில் உள்ள 11வது மாடியில் பாடகர் வசித்து வந்துள்ளார்.
தீ விபத்திலிருந்து உதித் நாரயணன் எஸ்கேப்
திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சுமார் நான்கு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.49 மணியளவில் தீ அணைக்கப்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பற்றி எரியும் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்ததில் தீயணைப்பு துறையினர் முழு முயற்சியில் ஈடுபட்டதாக, விபத்தில் இருந்து தப்பித்தது குறித்து பாடகர் உதித் நாரயணன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, " இரவு 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. நான் ஏ விங்கில் 11வது மாடியில் தங்கியிருந்தேன், பி விங்கில் தீப்பிடித்தது. தீ விபத்து ஏற்பட்டவுடன் நாங்கள் அனைவரும் இறங்கி, கட்டிட வளாகத்தில் பாதுகாப்பான இடத்துக்கு சென்றோம்.