நின்று போன திருமணம்..50 சவரன் நகையை வாங்கிவிட்டு ஏமாற்றிய சிங்கப்பூர் மாப்பிள்ளை? சீரியல் நடிகைக்கு நேர்ந்த சோகம்
நவம்பர் மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், ஏமாற்றப்பட்டு இருப்பதாக நடிகை ஜெனிப்பிரியா தெரிவித்துள்ளார். 50 சவரன் நகையை வாங்கிவிட்டு சிங்கப்பூர் மாப்பிள்ளை ஏமாற்றியதாகவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

நின்று போன திருமணம்..50 சவரன் நகையை வாங்கிவிட்டு ஏமாற்றிய சிங்கப்பூர் மாப்பிள்ளை? சீரியல் நடிகைக்கு நேர்ந்த சோகம்
சன்டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜெனிப்பிரியா. இவர் ராஜமன்னார் வகையறா என்ற சீரியலில் லீட் ரோலில் நடித்தார். தமிழ்ப்படம் 2 படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
இதையடுத்து இவர் சிங்கப்பூரை சேர்ந்த பைலட்டை திருமணம் செய்வதாக இருந்த நிலையில், தான் ஏமாற்றப்பட்டிருப்பதாக நடிகை ஜெனிப்பிரியா கூறியுள்ளார். அத்துடன் திருமணமும் நின்று போயுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பைலட்டுடன் நிச்சயதார்த்தம்
நடிகை ஜெனிப்பிரியாவுக்கும், சிங்கப்பூரை சேர்ந்த பைலட்டான துநேசன் என்பவருக்கும் இடையே திருமண உறுதி செய்யப்பட்டு, சென்னையில் நலுங்கு நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்றது.