TTF Vasan: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிரடி கைது.. 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
TTF Vasan: காரில் செல்லும் போது செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கிய காரணத்தினால் டிடிஎஃப் வாசன் மதுரையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

TTF Vasan: பிரபல யூடியூப்பர் மற்றும் பைக்கராக இருப்பவர் டிடிஎஃப் வாசன். தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் மத்தியில் தனது சாகச பைக் பயணத்தால் பிரபலமானார். பலரை மிரட்டும் விதமாகவும், ஆபத்தை விளைவுக்கும் விதமாக பைக்குகளை ஓட்டியும், ஸ்டண்ட் செய்தும் வீடியாேவாக பகிர்ந்து வந்தார்.
5 பிரிவுகளின் வழக்குப்பதிவு
இந்நிலையில் கடந்த ஆண்டு காஞ்சிபுரம் அருகே ஆபத்தான முறையில் வீலிங் செய்தபோது விபத்தில் சிக்கனார். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் மூலம் மீட்கப்பட்ட டிடிஎஃப் வாசன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின், அவர் மீது காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் காவல்நிலையத்தினர் பாதசாரிகளின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் பிரிவுகள் உட்பட 5 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தது.
10 ஆண்டுகளுக்கு ரத்து
இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் இருந்து வெளியில் வர ஜாமீன் விண்ணப்பித்த அவருக்கு பலமுறை ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, டிடிஎஃப் வாசனின் பைக்கை எரிக்கும்படியும், அவரது யூட்யூப் சேனலை மூடவேண்டும் எனவும் கடுமையாகப் பேசி, ஜாமீனை நிராகரித்தார்.
பின் 10 ஆண்டுகளுக்கு அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டது காஞ்சிபுரம் ஆர்டிஓ அலுவலகம். இந்நிலையில் பல்வேறு மேல்முறையீடுகளுக்குப்பிறகு டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருசக்கர வாகனம் ஓட்ட மட்டும் தானே கூடாது, அதில் ஏறி அமர்ந்து போஸ் கொடுக்கலாம்ல என்னும் தொனியில், அமர்ந்து தனது யூட்யூப் சேனல் பார்வையாளர்களுக்கான ஒரு வீடியோவை உருவாக்கி வெளியிட்டுள்ளார்.
டிடிஎஃப் வாசன் அதிரடி கைது
இந்நிலையில் தான் தற்போது டிடிஎஃப் வாசனை மதுரை அண்ணாநகர் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.
டிடிஎஃப் வாசன் கடந்த 15 ஆம் தேதி தனது காரில் சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி சென்று உள்ளார். அப்போது அவர் செல்போன் பேசியபடி கார் ஓட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதை தன் காரின் முன்பக்கமாக இருந்து படம் எடுத்து யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியீட்டு இருக்கிறார்.
6 பிரிவுகளின் கீழ் வழக்கு
இது தொடர்பாக மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் மணிபாரதி சார்பில் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இந்த புகாரை தொடர்ந்து கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், பொது மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கு வகையில் வாகனம் இயக்குதல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் டிடிஎஃப் வாசன் மீது அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து நேற்று ( மே 29 ) இரவு அண்ணாநகர் காவல் துறையினர் டிடிஎஃப் வாசனை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்