தமிழ் சினிமா ரீவைண்ட்: த்ரிஷா ஹீரோயினாக நடித்த முதல் படம்.. மே 16 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள் லிஸ்ட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தமிழ் சினிமா ரீவைண்ட்: த்ரிஷா ஹீரோயினாக நடித்த முதல் படம்.. மே 16 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள் லிஸ்ட்

தமிழ் சினிமா ரீவைண்ட்: த்ரிஷா ஹீரோயினாக நடித்த முதல் படம்.. மே 16 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள் லிஸ்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published May 16, 2025 05:30 AM IST

மே 16ஆம் தேதி முந்தைய ஆண்டுகளில் சிவாஜி கணேசனின் எவர்க்ரீன் கிளாசிக் படம், த்ரிஷா ஹீரோயினாக நடித்த முதல் படம் வெளியாகியுள்ளன. இந்த நாளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படங்களை பார்க்கலாம்.

தமிழ் சினிமா ரீவைண்ட்: த்ரிஷா ஹீரோயினாக நடித்த முதல் படம்.. மே 16 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள் லிஸ்ட்
தமிழ் சினிமா ரீவைண்ட்: த்ரிஷா ஹீரோயினாக நடித்த முதல் படம்.. மே 16 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள் லிஸ்ட்

லேசா லேசா

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ஷ்யாம், த்ரிஷா, விவேக் உள்பட பலர் நடித்து ரொமாண்டிக் படமாக உருவாகி 2003இல் ரிலீசான படம் லேசா லேசா. படத்தில் மாதவன் திருப்புமுனை தரும் விதமாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மாடலிங்கில் இருந்த த்ரிஷா ஹீரோயினாக நடித்த முதல் படமாக லேசா லேசா அமைந்திருந்தபோதிலும், அவரது முதல் படமாக மெளனம் பேசியதே வெளியானது. அதன் பிறகே லேசா லேசா ரிலீசானது.

மலையாள ஹிட் படமான சம்மர் இன் பெத்தல்கேம் படத்தின் கதையை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் படத்தின் மேக்கிங், காட்சியமைப்புகள் கதாபாத்திரங்களில் நடிப்பு பாராட்டுகளை பெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் ஹி்டடானதுடன், பாடல்களின் காட்சியமைப்புகளும் கவரும் விதமாக அமைந்தன

பார்த்திபன் கனவு

கரு. பழனியப்பன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சிநேகா, விவேக் பிரதான கதாபாத்திரங்களில் நடித்து ரெமாண்டிக் ட்ராமா பாணியில் உருவாகி 2003இல் ரிலீசான படம் பார்த்திபன் கனவு. படத்தில் சிநேகா இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அத்துடன் அவரது கதாபாத்திரத்தை மையப்படுத்தியே படத்தின் கதை அமைந்திருக்கும்.

வித்தியாசமான படத்தின் திரைக்கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன், படமும் சூப்பர் ஹிட்டானது. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த காமெடியன், சிறந்த காமெடி நடிகை, சிறந்த பாடலாசிரியர், சிறந்த பின்னணி பாடகி என படத்துக்கு தமிழ்நாடு அரசின் 7 விருதுகள் கிடைத்தன

வித்யாசாகர் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டானதுடன், அதன் காட்சியமைப்பும் அனைத்து தரப்பினரையும் கவரும் விதமாக அமைந்திருந்தன

வீரபாண்டிய கட்டப்பொம்மன்

பி.ஆர். பந்தலு இயக்கத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், பத்மினி, எஸ். வரலட்சுமி பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க வரலாற்று பின்னர் போர் திரைப்படமாக உருவாகியிருந்த வீரபாண்டிய கட்டப்பொம்மன் 1959இல் ரிலீசானது.

18ஆம் நூற்றாண்டில் பிரட்டீஷ் கிழக்கு இந்திய கம்பெனியை எதிர்த்த வீராபாண்டிய கட்டப்பொம்மன் என்ற மன்னரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த இந்த பயோபிக் படம் சிவாஜி கணேசனின் சிறப்பான நடிப்புக்கு சான்றாக இருக்கும் படங்களில் ஒன்றாக உள்ளது.

படத்தில் வெள்ளக்கார துரையை பார்த்து "வானம் பொழிகிறது, பூமி விளைகிறது. உனக்கு ஏன் தர வேண்டும் வரி" என சிவாஜி கணேசனின் கம்பீர வசனத்தை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. கட்டப்பொம்மன் என்பவர் இப்படித்தான் இருந்திருப்பார் என்பதை பிரதிபலிக்கும் விதமாக சிவாஜி கணேசனின் ஆக்ரோஷமான நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

லண்டனில் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்டு பின்னர் ரிலீசாகி 25 வாரங்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி சில்வர் ஜூப்ளி படமானது. 1960இல் நடைபெற்ற ஆப்ரோ ஆசிய திரைப்பட விழாவில் சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த இசையமைப்பு ஆகிய விருதுகளை வென்ற வீராபாண்டிய கட்டப்பொம்மன்,சிறந்த படத்துக்கான தேசிய விருதும் வென்றது.

1984இல் ரீ-ரிலீஸ், 2015இல் டிஜிட்டலில் ரீஸ்டோர் செய்யப்பட்ட பதிப்பு ரீ-ரிலீஸ் என இரண்டு முறை மறு வெளியீடு செய்யப்பட்ட வரவேற்பையும் பெற்றது. தமிழ் சினிமாவின் கல்ட் அந்தஸ்தை பெற்ற இந்தப் படம், எவர்க்ரீன் கிளாசிக் படமாகவும் உள்ளது.