MGR Marmayogi: முதல் நாயகன்.. காலத்தால் அழிக்க முடியாத மர்மயோகி என்ற காவியம்
மர்மயோகி திரைப்படம் இன்றுடன் வெளியாகி 73 ஆண்டுகள் ஆகின்றன.

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகராக இருந்தார் எம்ஜிஆர். சினிமா மட்டுமல்லாது அரசியல் துறையிலும் தனது தடத்தை பதித்து கொடிகட்டி பறந்தார். ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில படங்கள் இவரை மக்கள் மத்தியில் நாயகனாக அறியச் செய்தது. அப்படிப்பட்ட திரைப்படங்களில் ஒன்றுதான் மர்மயோகி.
முதல் முறை எம்ஜிஆரை கதாநாயகனாக வைத்து வெளியான திரைப்படம் ராஜகுமாரி. அந்தத் திரைப்படத்தை ஏ.எஸ்.ஏ சாமி இயக்கினார். இந்த ராஜகுமாரி திரைப்படம் 1947 ஆம் ஆண்டு வெளியானது. எம்ஜிஆர் அதே இயக்குனரிடம் சேர்ந்து நடித்த திரைப்படம் தான் மர்மயோகி. தன்னைச் சுற்றி கதை நகர வேண்டும் என எம்ஜிஆர் கேட்டுக் கொண்டதால், இயக்குனர் சாமி பல நாவல்களை திரட்டி எழுதிய கதை தான் இந்த மர்மயோகி.
கதை
ஒரு நாட்டில் இருக்கக்கூடிய நடனக்காரி கொஞ்சம் கொஞ்சமாக அரண்மனைக்குள் நுழைந்து, மன்னரை தன் வசப்படுத்தி பின்னர் அவரை கொலை செய்து விட்டு ராணியாக அரியணை ஏறுகிறார். அதன் பின்னர் சமூக சீர்திருத்தவாதியாக பொதுநலவாதியாக கரிகாலன் என்ற ஒரு இளைஞன் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.