HBD M.R.Radha: ‘கலகக்குரல் நடிகவேள் எம்.ஆர் ராதா’ பிறந்த நாள் இன்று!
"எல்லாக் கலைஞர்களும் ரசிகர்களைத் திருப்திப்படுத்த அவர்களின் பின்னால் செல்வார்கள். ஆனால் ராதாவோ ரசிகர்களின் திருப்தியைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களைத் தன் பின்னால் வரவைப்பவர். அதனால்தான் அவருக்கு மன்றம் வைத்தேன்" என்ற பெரியார்

நாடகம், சினிமா, அரசியல் என எல்லாவற்றிலும் கலகம் செய்தவர் எம்.ஆர்.ராதா. அற்புதமான நடிகரான எம்.ஆர்.ராதா பிறந்தநாளில் அவரது வாழ்வை சற்று திரும்பி பார்க்கலாம்.
மெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணா என்ற எம்.ஆர்.ராதா 1907 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் பிறந்தார். சிறுவயதில் ராதா தனது தாயுடன் ஏற்பட்ட சிறிய சண்டையின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார். அதில் அவரது தாய் சாப்பிட கூடுதல் மீன் துண்டு கொடுக்க மறுத்தார் என்பதை தவற வேறில்லை.
இதையடுத்து 10 வயதில் தொடங்கி, முதலில் சிறிய சிறிய வேடங்களில் நாடகங்களில் தோன்றினார். கடைசியில் நாடகங்களுக்கான கதைகள் அவருக்காகவே எழுதப்பட்டது. ஒரு கட்டத்தில் ராதாவின் மேடை நாடகமான ரத்த கண்ணீர் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அந்த படத்தின் வெற்றியின் மூலம் பிரபலமடைந்தார். இப்படி நாடகத்தை தொடர்ந்து அவர் திரைத்துறையிலும் ஜொலிக்க ஆரம்பித்தார்.
