தக் லைப் விமர்சனம்: நாயகனா? செக்கச் சிவந்த வானமா? மணிரத்னம் செய்ததும்.. கமல் செய்யாததும் என்ன?
பயங்கர எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், மணிரத்னம் இயக்கி, கமல், சிம்பு, த்ரிஷா நடித்த தக் லைப் திரைப்படம், இன்று உலகெங்கிலும் வெளியாகியுள்ளது.

கமல், சிலம்பரசன், திரிஷா, நாசர், அபிராமி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து, பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் தக் லைஃப். ஏ ஆர் ரஹ்மானின் இசை, ரவி கேவின் ஒளிப்பதிவு என மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்தத்திரைப்படம் எப்படி இருக்கிறது பார்க்கலாம்.
கதையின் கரு:
டெல்லியில் மிகப்பெரிய கேங்ஸ்டராக வலம் வந்து கொண்டிருக்கிறார் காயல் பட்டினக்காரார் சக்தி வேல் நாயக்கர் (கமல்ஹாசன்). இவருடைய அண்ணன் மாணிக்கம் (நாசர்). இவர்களுடன் சம்பவம் ஒன்றில் தங்கையை தொலைத்த அமரன் (சிலம்பரசன்) இணைந்து கொள்ள நேரிடுகிறது. ஒரு கட்டத்தில் சக்தியின் வளர்ப்பு மகனாகவே மாறிப்போன அமரன்தான் அவருக்கு பாதுகாப்பு கேடயமாக இருக்கிறான்.
காலம் செல்ல செல்ல, தம்பிக்கு கிடைக்கும் செல்வாக்கை பார்த்து பொறாமை படும் மாணிக்கம், அந்த இருக்கையை பிடிக்க, அமரனை வைத்து சக்தியை தீர்த்துக்கட்ட முயற்சிக்கிறார். அந்த கொலை முயற்சியில் சக்திக்கு என்ன ஆனது? அதிகார இருக்கையில் கடைசியாக அமர்ந்தது யார்? சக்திவேலின் குடும்பம் என்ன ஆனது? அமரன் என்ன ஆனான்? தொலைத்த தங்கை கிடைத்தாளா?உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்கள்தான் படத்தின் கதை