பப்ளிசிட்டிக்காக பேசுனா படத்தை தடை செய்வீங்களா? - தக் லைஃப் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பப்ளிசிட்டிக்காக பேசுனா படத்தை தடை செய்வீங்களா? - தக் லைஃப் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

பப்ளிசிட்டிக்காக பேசுனா படத்தை தடை செய்வீங்களா? - தக் லைஃப் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 19, 2025 05:15 PM IST

பப்ளிசிட்டிக்காக் இது போன்ற கருத்துக்களை முன் வைத்தார் என்று வாதிடப்பட்ட நிலையில், அதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், கமல் ஏதேனும் அவதூறு கருத்து தெரிவித்திருந்தால் அவதூறு வழக்கு தொடரலாம் அல்லது பதில் அறிக்கை விடலாமே தவிர படத்தை வெளியிட தடையாக இருக்கக் கூடாது எனக் கூறியது.

பப்ளிசிட்டிக்காக பேசுனா படத்தை தடை செய்வீங்களா? - தக் லைஃப் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
பப்ளிசிட்டிக்காக பேசுனா படத்தை தடை செய்வீங்களா? - தக் லைஃப் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

மன்னிப்புக்கேட்காத கமல்ஹாசன்

ஆனால், அவர் மன்னிப்புக் கேட்க மறுத்து விட்டார். இந்த நிலையில் கர்நாடகா வர்த்தக சபை கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியிட தடை விதித்தது. இதனை எதிர்த்து கமல்ஹாசன் கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடினார்.

அங்கும் அவர் மன்னிப்புக்கேட்க வற்புறுத்தப்பட்டார். ஆனால், அதன்பின்னரும் கமல்ஹாசன் மன்னிப்புக்கேட்கவில்லை. இதனால் கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியாக வில்லை.

பொதுநல மனு

இந்தத்தடையை எதிர்த்து மகேஷ் ரெட்டி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் போலீஸ் பாதுகாப்புடன் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கூறிய முழு விபரம் பின்வருமாறு:-

ஒரு நகைச்சுவை நடிகர் ஏதாவது கூறி விட்டால் கூட உணர்வுகள் புண்படுகின்றன எனக்கூறி நாசவேலைகள் அரங்கேறுகின்றன.நாம் எங்கே எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். நாளை இதே போன்று ஒரு நாடகத்திற்கு எதிராகவோ, கவிதைக்கு எதிராகவோ கும்பல்கள் மிரட்டல் விடுக்க வாய்ப்பு இருக்கிறது.

முழு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்

தக் லைஃப் திரைப்படத்தை வெளியிடுவதற்கு கர்நாடக அரசு முழு பாதுகாப்பை அளிக்க வேண்டும். வன்முறைகள் ஏற்பட்டால் அரசு அதனை அடக்க வேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும். படத்தை திரையிடுவதற்கு யாரேனும் தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும்.

இதற்கிடையே கர்நாடக வர்த்தக சபை சார்பில் கமல் பப்ளிசிட்டிக்காக் இது போன்ற கருத்துக்களை முன் வைத்தார் என்று வாதிடப்பட்ட நிலையில், அதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், கமல் ஏதேனும் அவதூறு கருத்து தெரிவித்திருந்தால் அவதூறு வழக்கு தொடரலாம் அல்லது பதில் அறிக்கை விடலாமே தவிர படத்தை வெளியிட தடையாக இருக்கக் கூடாது எனக் கூறியது.

மேலும், சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என்று கன்னட திரைப்பட வர்த்தக சபைக்கு கண்டனத்தை பதிவு செய்த உச்ச நீதிமன்றம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை குறிப்பிட்டு அவர்களும் கன்னடர்கள்தான். நாம் அனைவரும் ஒன்றே என கூறியது.