பிணவறையில் தோன்றிய பாடல்.. செம ஹிட்.. இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான் பாடல் உருவான கதை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பிணவறையில் தோன்றிய பாடல்.. செம ஹிட்.. இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான் பாடல் உருவான கதை!

பிணவறையில் தோன்றிய பாடல்.. செம ஹிட்.. இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான் பாடல் உருவான கதை!

Divya Sekar HT Tamil
Dec 13, 2024 12:28 PM IST

ஆலங்குடி சோமு எழுதிய இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான் - அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான் என்ற பாடல் உருவான கதை குறித்து பார்க்கலாம்.

பிணவறையில் தோன்றிய பாடல்.. செம ஹிட்.. இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான் பாடல் உருவான கதை!
பிணவறையில் தோன்றிய பாடல்.. செம ஹிட்.. இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான் பாடல் உருவான கதை!

அப்படி இப்படத்தில் ஆலங்குடி சோமு எழுதிய இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான் - அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்’ என்ற பாடல் உருவான கதை குறித்து பார்க்கலாம்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த ஆலங்குடியில், 1932ஆம் ஆண்டு டிசம்பர் 12ல் பிறந்தவர் சோமு. ஆலங்குடி சோமு என்றால் தான் அனைவருக்கும் தெரியும். பாடலாசிரியர், கவிஞர், திரைப்படத் தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்டவர் ஆலங்குடி சோமு.

பாடல் உருவான கதை

ஆலங்குடி சோமுவின் தம்பி தஞ்சாவூரில் மருத்துவமனையில் வேலை செய்கிறார். அவரை பார்ப்பதற்காக ஆலங்குடி சோமு தஞ்சாவூர் செல்கிறார். அப்பொழுது மருத்துவமனையில் பிணவறையில் நிறைய பேர் சுற்றி இருக்கிறார்கள். அதுவும் அழுது கொண்டு சோகத்தில் மூழ்கி இருக்கிறார்கள். இதனைப் பார்த்த ஆலங்குடி சோமு தனது தம்பியிடம் என்ன ஆனது என்று விசாரிக்கிறார்.

அதற்கு ஆலங்குடி சோமு-வின் தம்பி இந்த பிணவறையில் வரும் உடலை எல்லாம் எடுக்க நபர் ஒருவர் இருந்தான். அவன் இன்று இறந்துவிட்டார். அதனால் தான் மருத்துவமனையேசோகத்தில் உள்ளது என தம்பி கூறுகிறார். இது பாடலாசிரியர் ஆலங்குடி சோமுவின் மனதில் பதிந்து விட்டது. இதற்கு ஏற்றார் போல இரவும் பகலும் என்ற படத்தில் பாடல் ஒன்று எழுத இவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அப்பொழுது தான் பார்த்த அந்த காட்சியை வைத்து இவர் ஒரு பாடல் எழுதுகிறார்.

200 பாடல்களுமே ஹிட்

அந்தப் பாடல் தான் 'இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான் - அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்’ என்ற பாடல். இந்தப் பாடலை அசோகன் பாடியிருப்பார். தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட பாடல்களை ஆலங்குடி சோமு எழுதி இருக்கிறார். ஆனால் இந்த பாடலுக்கு தான் தத்துவ கவிஞர் என்ற பெயர் அவருக்கு கிடைத்தது. ஆலங்குடி சோமு எழுதிய 200 பாடல்களுமே ஹிட் என்று சொல்லும் அளவிற்கு அவர் பாடல்களை கொடுத்திருப்பார்.

'கலைமாமணி' விருது வழங்கப்பட்டது

இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான், மலருக்குத் தென்றல் பகையானால், ஆடலுடன் பாடலை கேட்டு, துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை உள்ளிட்ட ஏராளமான ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். கே.பாலசந்தரின் இயக்கத்தில், பத்தாம்பசலி என்ற படத்தையும், ஜெய்சங்கர் நடிப்பில், வரவேற்பு என்ற படத்தையும் சொந்தமாக தயாரித்தார். இவருக்கு, 1973-74ம் ஆண்டில், தமிழக அரசின், 'கலைமாமணி' விருது வழங்கப்பட்டது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.