கண்ணதாசனை அசிங்கபடுத்திய அண்ணன்.. பாடலில் ஆதங்கத்தை கொட்டிய கண்ணதாசன்.. அண்ணன் என்னடா தம்பி என்னடா பாடல் உருவான கதை!
இயக்குனர் பீம் சிங் இயக்கத்தில், 1965-ஆம் ஆண்டு வெளியான பழனி திரைப்படத்தில் இடம்பெற்ற அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே பாடல் உருவான கதை குறித்து பார்க்கலாம்.
தமிழ் சினிமா மட்டுமல்லாது தமிழ் மொழியையும் தாங்கி பிடித்து வளர்த்தெடுத்தவர் கவியரசர் கண்ணதாசன். பல பத்திரிகைகளில் பணியாற்றி தனது கதையை பல பரிமாணங்களில் எழுதியுள்ளார். தனது எழுத்து திறமையால் 17 வயதிலேயே ஒரு பத்திரிக்கையின் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார். கவிதைகள் எழுதி மிகப்பெரிய அடையாளத்தை பெற்றார் கண்ணதாசன். அதன் பின்னர் சினிமாவிற்கு பாடல் எழுத வேண்டும் என ஒரு சிந்தனை தோன்றியுள்ளது. பின்னர் மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலக்காவில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
அங்கேதான் இவருக்கு கலைஞர் கருணாநிதியின் நட்பு கிடைத்துள்ளது. அதற்குப் பிறகு கதைகள் எழுதுவதை விட்டுவிட்டு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுவதை முழுமூச்சாக செய்தார். அனைத்து விதமான பாடல்களையும் மிகவும் எளிமையாக எளிதாக தமிழ் நயம் மாறாமல் எழுதக்கூடிய திறன் கொண்டவராக விளங்கி வந்தார். உணர்வுகளுக்கு மொழியால் வடிவம் கொடுக்க முடியும் என்றால் அது கவியரசர் கண்ணதாசன் மட்டுமே சாத்தியம்.
மக்கள் மனதை வசியப்படுத்தும் பாடல் வரிகள்
கண்ணதாசன் எந்த சூழ்நிலை கொடுத்தாலும் அதற்கு ஏற்றவாறு பாடல்களை எழுதும் திறம் கொண்டவர். காதல், சோகம், விரக்தி என எல்லா சூழ்நிலைக்கும் ஏற்ப வரிகளை கொடுத்து மக்கள் மனதை வசியப்படுத்தி விடுவார் என்றே சொல்லலாம். எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஆகியோருக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் கண்ணதாசன்.
கவிஞர் கண்ணதாசனை பொறுத்தவரை, தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் பல சம்பவங்களை சில பாடல்களில் எதார்த்தமாக சொல்லிவிடுவார். அப்படி தன்னுடைய அண்ணனிடம் உதவிகேட்டு சென்று அசிங்கப்பட்ட போது, ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக கண்ணதாசன் ஒரு பாடலை எழுதி உள்ளார். அந்த பாடல் தான் 'அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே’ பாடல்.
அண்ணன்னை விமர்சித்த கண்ணதாசன்
இயக்குனர் பீம் சிங் இயக்கத்தில், 1965-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பழனி. இந்த படத்தில், சிவாஜி கணேசன் எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், தேவிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே’ பாடலுக்கு விஸ்வநாதன் ராம மூர்த்தி இசையமைக்க, கண்ணதாசன் வரிகள் எழுத டி.எம்.சௌந்தர் ராஜன் பாடிய இப்பாடல் சூப்பர் ஹிட் ஆனது.
இந்த பாடலை கண்ணதாசன் தன்னுடைய அண்ணன் இடம் ஏதோ அவசர உதவி கேட்டு செல்ல அவர் செய்ய முடியாது என சொல்லியதால் அந்த ஆதங்கத்தை கொட்டி தீர்வும் விதமாகவே, விமர்சித்தி பாடியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆதங்கத்தை கொட்டி தீர்த்த கண்ணதாசன்
அதாவது வழக்கமாக எம்எஸ்வி டியூன் போட ஆரம்பித்தாலே கண்ணதாசன் வரிகளை கொட்டுவாராம். ஆனால் அன்றைக்கு எம்எஸ்வி டியூன் போட ஆரம்பித்தும் கண்ணதாசன் எந்த வரிகளும் எழுதாமல் அமைதி காத்தாராம். அப்பொழுதுதான் உனக்கு ஏதாவது பிரச்சனையா? ஏன் இப்படி இன்று மௌனமாக இருக்கிறாய் என்று கேட்க அவர் தான் அண்ணனிடம் உதவி கேட்டபோது அவர் அதை செய்யவில்லை என ஆதங்கத்தை சொல்லி உள்ளார்.
பின்னர் அதனையே பாடல் வரிகளாக மாற்றி கண்ணதாசன் எழுதியுள்ளார். இப்படி தான் இந்தப் பாடல் உருவாகியுள்ளது. கண்ணதாசன் பொதுவாக பல பாடல்களில் தனக்கு நடந்த அனுபவத்தையும் அதில் சேர்த்து கொடுப்பாராம். அதேபோல தான் இந்த பாடலும் அவரது சொந்த பிரச்சனையை அண்ணன் உதவாததை சுட்டிக்காட்டி விமர்சித்து எழுதியுள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்