தமிழ் சினிமாவில் அடுத்த அதிர்ச்சி.. ஒரு கிடாயின் கருணை மனு இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தமிழ் சினிமாவில் அடுத்த அதிர்ச்சி.. ஒரு கிடாயின் கருணை மனு இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார்!

தமிழ் சினிமாவில் அடுத்த அதிர்ச்சி.. ஒரு கிடாயின் கருணை மனு இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார்!

Marimuthu M HT Tamil Published Nov 16, 2024 12:25 AM IST
Marimuthu M HT Tamil
Published Nov 16, 2024 12:25 AM IST

தமிழ் சினிமாவில் அடுத்த அதிர்ச்சி.. ஒரு கிடாயின் கருணை மனு இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார்!

தமிழ் சினிமாவில் அடுத்த அதிர்ச்சி.. ஒரு கிடாயின் கருணை மனு இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார்!
தமிழ் சினிமாவில் அடுத்த அதிர்ச்சி.. ஒரு கிடாயின் கருணை மனு இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார்!

2017ஆம் ஆண்டு வெளியான, ஒரு கிடாயின் கருணை மனு என்னும் திரைப்படத்தை எழுதி இயக்கியவர், இயக்குநர் சுரேஷ் சங்கையா. இவர் காக்கா முட்டை திரைப்படப் புகழ் இயக்குநர் மணிகண்டனின் உதவி இயக்குநர் ஆவார். ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தில் நடிகர் விதார்த்தும், அறிமுக நாயகி ரவீனா ரவியும் நடித்து இருந்தனர். இறைவனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த கொண்டுசெல்லப்படும் ஆட்டின் பார்வையில் இருந்து கதை சொல்லி, தனது முதல் படத்திலேயே அசத்தியிருப்பார். இப்படம் ராஜபாளையம் மற்றும் அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரப்பகுதி மக்களின் வாழ்வியலை நகைச்சுவை கலந்து அப்படியே சொன்னதால், சி சென்டரில் நன்கு ஓடியது.

பிரேம்ஜியை ஹீரோவாக்கியவர்:

அடுத்து இவர் இரண்டாவதாக இயக்கி சோனி லிவ் ஓடிடி தளத்தில் 2023-ல் வெளியான திரைப்படம் தான், சத்திய சோதனை. ஒரு குக்கிராமத்தில் நடக்கும் கொலையினை, அந்த கிராமத்தில் அமைந்துள்ள காவல் நிலைய காவலர்கள் எப்படி விசாரிக்கின்றனர் என்பதை நகைச்சுவை கலந்து சொன்ன படம் தான், சத்திய சோதனை. இப்படமும் பலரால் பார்த்து ரசிக்கப்பட்டது. இப்படத்தில் பிரேம்ஜி நாயகனாக நடித்து இப்படமும் நல்ல வரவேற்பினைப் பெற்றது. 

அதன்பின், நகைச்சுவை நடிகர் செந்திலை ஹீரோவாக வைத்து சுரேஷ் சங்கையா ஒரு படத்தை எடுத்து இருந்தார். இருப்பினும், நிதிப் பிரச்னை காரணமாக படம் இன்னும் ரிலீஸாகவில்லை.

அடுத்து, யோகி பாபு, ரேச்சல் ரெபேக்கா, ஜார்ஜ் மரியான் ஆகியோரை வைத்து சுரேஷ் சங்கையா இயக்கிய படம் தான், ‘ கெணத்த காணோம்’. இப்படத்தின் சூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நிறைவுற்று, ஓடிடி தளத்தில் இப்படம் விரைவில் வெளியிடப்படும் என்னும் நிலையை அடைந்து இருந்தது.

அப்போதுதான், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா, சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கல்லீரல் செயலிழப்புக்கு உள்ளாகி நவ.15ல் உயிரிழந்தார்.

ரிலீஸான தனது இரண்டு படங்கள் மூலம், தனித்துவமான இயக்குநராக இருந்த சுரேஷ் சங்கையா கல்லீரல் செயலிழப்பால் காலமானா செய்தி ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

சுரேஷ் சங்கையாவின் பின்புலம்:

இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் ஊர் ராஜபாளையம் அருகேயுள்ள கரிசல்பட்டி. பி.எஸ்.சி. கம்பியூட்டர் சயின்ஸ் படித்தவர். ஆரம்பத்தில் சட்டம் பயில நுழைவுத்தேர்வு எழுதி, சினிமாவின் மீது ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக சென்னையில் வாய்ப்புத் தேடி அலைந்து இருந்திருக்கிறார். அப்போது வங்கியில் வேலைபார்த்துக்கொண்டே சிறிது காலம் வேலைப் பார்த்திருக்கிறார். பின் அதில் இருந்து வெளியில் வந்த சுரேஷ் சங்கையா, சினிமாவில் ஆர்வமாக வாய்ப்புத்தேடிக்கொண்டிருந்த நண்பர்களுடன் சேர்ந்து, வள்ளூவர் கோட்டம் பகுதியில் தங்கியிருந்து வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தார். அதன்பின் சரியான வாய்ப்புகள் இன்றி ஊருக்குச் சென்ற சுரேஷ் சங்கையாவுக்கு,  பூ படத்தின் சூட்டிங் நடக்கும் பகுதியில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய மணிகண்டனின் சந்திப்பு ஒரு முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. அதன்பின், அவரது உதவி இயக்குநராக 4 ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பின், கிடைத்த வாய்ப்பு தான், கிடாயின் கருணை மனு. சுரேஷ் சங்கையாவுக்கு திருமணமாகி ஆறு வயதில் குழந்தை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.