Naga Chaitanya: இது என்ன நாக சைதன்யா படத்துக்கு நாவலால் வந்த புது பிரச்சன.. அடுக்கடுக்காக கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Naga Chaitanya: இது என்ன நாக சைதன்யா படத்துக்கு நாவலால் வந்த புது பிரச்சன.. அடுக்கடுக்காக கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்..

Naga Chaitanya: இது என்ன நாக சைதன்யா படத்துக்கு நாவலால் வந்த புது பிரச்சன.. அடுக்கடுக்காக கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்..

Malavica Natarajan HT Tamil
Published Feb 09, 2025 09:00 PM IST

Naga Chaitanya: நாக சைதன்யா நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்துள்ள தண்டேல் படம் ஒரு புத்தகத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதா என நெட்டிசன்கள் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்து வருகின்றனர்.

Naga Chaitanya: இது என்ன நாக சைதன்யா படத்துக்கு நாவலால் வந்த புது பிரச்சன.. அடுக்கடுக்காக கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்..
Naga Chaitanya: இது என்ன நாக சைதன்யா படத்துக்கு நாவலால் வந்த புது பிரச்சன.. அடுக்கடுக்காக கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்..

நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி ஜோடி

நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பு மற்றும் பின்னணி இசை படத்தின் முக்கிய அம்சங்களாக பேசப்பட்டு வந்தன. படத்தின் விளம்பரத்தின் போது, தாண்டேல் பாகிஸ்தான் கடலோர காவல்படை மற்றும் சிறை தண்டனை அனுபவித்த சில மீனவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். இந்த படத்தை கார்த்திக் என்ற எழுத்தாளர் எழுதியதாக கூறப்படுகிறது. ஆனால் இது ஒரு நாவலை அடிப்படையாக கொண்ட திரைப்படம் என்றும் தற்போது ஒரு விவாதம் கிளம்பி உள்ளது.

‘முன்னிட்டி கீதலு’ நாவல்

சின்டாக்கி ஸ்ரீநிவாஸ் ராவ் எழுதிய ‘முன்னிட்டி கீதலு’ நாவலை அடிப்படையாக கொண்ட படம் தான் தண்டேல் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் அதிகளவில் பரவி வருகின்றன. முன்னிட்டி கீதலு மீனவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட நாவல் ஆகும். இது மத்ஸ்ய வேணம் கிராமத்தில் உள்ள போலாராவ் மற்றும் எர்ரம்மா தம்பதியினரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ஸ்ரீநிவாஸ் ராவால் எழுதப்பட்டுள்ளது.

போலாராவ், எர்ரம்மா காதல் கதை

மத்ஸ்யவேணம் கிராம மக்கள் மீன்பிடிக்க குஜராத் அருகே உள்ள அரேபிய கடலுக்கு செல்கிறார்கள். அவர்கள் எட்டு மாதங்கள் மீன்பிடிக்க கடலில் வசிக்கிறார்கள். ஜிபிஎஸ் வேலை செய்யாததால், போலாராவின் படகு பாகிஸ்தான் கடல் எல்லையை கடக்கிறது. 27 மீனவர்களை பாகிஸ்தான் கடலோர காவல்படை கைது செய்து சிறையில் அடைக்கிறது. பாகிஸ்தான் சிறையில் மீனவர்கள் எவ்வளவு சிரமங்களை சந்தித்தார்கள்? இறுதியில் சிறையிலிருந்து எப்படி விடுவிக்கப்பட்டார்கள்? என்பது பற்றி இந்த நாவல் கூறுகிறது. இந்த நாவல் அமேசான் விற்பனைத் தளத்தில் கிடைக்கிறது.

ஒத்துப் போகும் கதை

இந்த நாவலில் போலாராவ் மற்றும் எர்ரம்மா இருவரின் காதல் ஆழமாக விவரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே வேறு ஒரு நபர் வந்து, பின்னர் இந்த காதல் ஜோடியின் வாழ்வில் வேறு என்ன நடக்கிறது என்பது போன்ற பல விஷயங்கள் இந்த நாவலில் உள்ளன என்று கூறப்படுகிறது. நாவலின் கதை தாண்டேல் திரைப்படத்தின் கதைக்கு மிகவும் நெருக்கமாக உள்ளதால் போலாராவ் மற்றும் எர்ரம்மா கதையை போலவே நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இந்த திரைப்படத்தில் தோன்றுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இதனால், இந்த நாவலைத் தான் படமா எடுத்தார்களா இதற்கு காப்புரிமை பெறப்பட்டதா என்றெல்லாம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அல்லு அர்விந்த், பன்னி வாசு தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு சென்சார் வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. பல திரையரங்குகளில் தாண்டேல் திரைப்படம் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் சிறப்பான நடிப்பை வழங்கி உள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.