ThankarBachan - ரஜினி நல்ல படங்களை செய்யமுடியவில்லை - விளாசிய தங்கர்பச்சான்
ரஜினி நல்ல படங்களை செய்யமுடியவில்லை என தங்கர்பச்சான் கருத்து தெரிவித்துள்ளார்.

வெகுநாட்கள் கழித்து நடிகர் ரஜினிகாந்த் நடித்து, கடந்த மாதம் ஆகஸ்ட் 10ஆம் தேதி, வெளியான ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாயைத் தாண்டி, வசூலில் சாதனைப் படைத்துள்ளது. இந்நிலையில், இந்த வாரம் செப்டம்பர் 1ஆம் தேதி தங்கர்பச்சானின் இயக்கத்தில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படம் குறித்த தங்கர்பச்சான் யூட்யூப் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், 'ரஜினிகாந்த் அண்ணா மிகப்பெரிய நடிகராக ஆனதற்குப் பின் நல்ல படங்களை செய்யமுடியவில்லை. அவள் அப்படித்தான், முள்ளும் மலரும், புவனா ஒரு கேள்விக்குறி அதுபோன்ற படங்களை செய்யமுடியவில்லை. என்னதான் கோடிக்கணக்கான ரூபாய் சம்பளமாகப் பெற்றாலும், அவர் மனசுக்கே அது தெரியும்.
நாம நல்ல சினிமா படங்களை செய்றோமானு சந்தேகம் இருக்கும். 500 படங்களை செய்யலாம். யதார்த்த வாழ்வோடு எது இணைகிறதோ.. அப்போதுதான் அது நல்ல படமாக மாறும். சண்டை, துப்பாக்கி ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்தினால் நல்ல சினிமா ஆகிவிடாது. பான் இந்திய படங்கள் எனப் பல கோடிரூபாய் செலவு செய்து படம் எடுப்பதற்குப் பதில், அந்த பட்ஜெட்டில் 100 படங்களை செய்யலாம்' எனத் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
