Thalapathy Vijay: "தங்கை கொடுத்த தனிமை வலி.. முடங்கி போன சுட்டி விஜய்"- ஸ்கூல் டீச்சர் சொன்ன சீக்ரெட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thalapathy Vijay: "தங்கை கொடுத்த தனிமை வலி.. முடங்கி போன சுட்டி விஜய்"- ஸ்கூல் டீச்சர் சொன்ன சீக்ரெட்

Thalapathy Vijay: "தங்கை கொடுத்த தனிமை வலி.. முடங்கி போன சுட்டி விஜய்"- ஸ்கூல் டீச்சர் சொன்ன சீக்ரெட்

Kalyani Pandiyan S HT Tamil
Published Jul 04, 2024 05:09 AM IST

Thalapathy Vijay: அவர் ஏதாவது ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தி செய்ய ஆரம்பித்து விட்டால், அதில் அவர் பெஸ்டாக வந்து விடுவார், பள்ளியில் அவர் விளையாட்டில் மிகவும் ஆர்வமாக இருந்தார். அதில் நன்றாகவும் தேர்ந்தார். விஜய், அவருக்கான விஷயங்களை அவரே தீர்மானம் செய்வார். - ஸ்கூல் டீச்சர் சொன்ன சீக்ரெட்

Thalapathy Vijay: தங்கை கொடுத்த தனிமை வலி.. முடங்கி போன சுட்டி விஜய்"- ஸ்கூல் டீச்சர் சொன்ன சீக்ரெட்
Thalapathy Vijay: தங்கை கொடுத்த தனிமை வலி.. முடங்கி போன சுட்டி விஜய்"- ஸ்கூல் டீச்சர் சொன்ன சீக்ரெட்

அதில் அவர் பேசும் போது, "நடிகர் விஜய் ஐந்தாம் வகுப்பில் இருந்து, எங்கள் பள்ளியில்தான் படித்தார். அவர், எல்லா குழந்தைகளையும் போல சேட்டையெல்லாம் செய்ய மாட்டார். அவர் எந்த சூழ்நிலையிலும், எந்த ஒரு மாணவரையும் துன்புறுத்தியது கிடையாது.

யாரையும் துன்புறுத்தியது கிடையாது 

அது வார்த்தையாலும் சரி, செயலாலும் சரி, அவர் யாரையுமே தொந்தரவு செய்ய மாட்டார். அதற்காகவே, நாங்கள் அவரை கடவுளின் குழந்தை என்று அழைப்போம். விஜய் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பொழுது அவரது தங்கையான வித்யா எல்கேஜி படித்துக் கொண்டிருந்தார். அவரை நாங்கள் பட்டாம்பூச்சி என்று அழைப்போம். அவரும் அவரது அண்ணனான விஜயும் அவ்வளவு பாசமாக இருப்பார்கள். 

அமைதியான விஜய்:

அப்போது, விஜய் மிக நன்றாக கிட்டார் வாசிப்பார், நன்றாக வரைவார். இந்தநிலையில்தான் திடீரென்று வித்யா இறந்துவிட்டார். அதன் பின்னர், விஜய் போட்டிகளில் பங்கேற்பதையே அப்படியே நிறுத்திவிட்டார். கிட்டார், ஓவியம் வரைதல் என அனைத்தையும் அப்படியே ஓரங்கட்டிவிட்டார்.

அப்போது, எஸ்.ஏ சி அவரது தொழிலில் பீக்கில் இருந்து சமயம். அதனால், அவர் முழுக்க முழுக்க தனது தொழில் சார்ந்த விஷயங்களில் மிகவும் பிஸியாக இருந்தார். ஷோபாவும் மகளை இழந்த வருத்தத்தில் முடங்கி போயிருந்தார். இதனால் விஜய்க்கு யாருமே இல்லாத ஒரு சூழ்நிலையானது உருவாகிவிட்டது. அதனை, விஜய்யால் எப்படி கையாள வேண்டும் என்பது தெரியவில்லை இதையடுத்து அவர் அப்படியே அமைதியாகிவிட்டார். 

விஜயை பொறுத்தவரை படிப்பில் பெரிய சுட்டியெல்லாம் இல்லை. ஆனால், அவர் ஏதாவது ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தி செய்ய ஆரம்பித்து விட்டால், அதில் அவர் பெஸ்டாக வந்து விடுவார், பள்ளியில் அவர் விளையாட்டில் மிகவும் ஆர்வமாக இருந்தார். அதில் நன்றாகவும் தேர்ந்தார். விஜய், அவருக்கான விஷயங்களை அவரே தீர்மானம் செய்வார். அவரை யாருமே கை வசத்திற்குள் கொண்டு வர முடியாது." என்று பேசினார். 

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9