களமிறங்கி மக்களை சந்திக்கும் தளபதி.. ஜனவரி முதல் சுற்றுப்பயணம் செய்யும் தளபதி விஜய் - தாடி பாலாஜி சொன்ன விஷயம்
2025 ஜனவரி 27 முதல் தமிழ்நாடு முழுக்க அரசியல் சுற்றப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் தளபதி விஜய். நாம் ஒற்றுமையா இருந்தால் தான் தலைவரை அரியணையில் அமர வைக்க முடியும் என்று நடிகர் தாடி பாலாஜி பேசியுள்ளார்.
தவெக கட்சி தலைவரும், நடிகருமான விஜய் தனது கட்சி அலுவலகமான பனையூரில் வைத்து அரசியல் செய்கிறார். ட்விட்டரில் கண்டனம் தெரிவிப்பதும், அறிக்கை விடுவதும், மூத்த தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள் என்றால் போட்டோவுக்கு மாலை அணிவித்து மரியாதை கொடுப்பதுமாக இருந்துகொண்டு கள அரசியல் செய்யாமல் இருந்து வருகிறார் என தொடர்ந்து அவர் மீது விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து 2025இல் அவர் தமிழ்நாடு மக்களை நேரில் சந்திக்கும் விதமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளாராம். இதுபற்றி தவெக கட்சியை சேர்ந்த நடிகரும், விஜய்யின் பல படங்களில் நடித்தவருமான நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார்.
சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய்
இதுதொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "எல்லாம் விஜய்யின் முடிவு தான். அவர் எது சொன்னாலும் பவர் புல்லா இருக்கும். ஒன்னு சொன்னாலே பெரிசா ஆகிடுது. ஜனவரி 27ஆம் தேதி முதல் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.
உள்ளே பேசிக்கொண்டார்கள். தேர்தலை முன்னிட்டு நிறைய தலைவர்கள் சுற்றுப்பயணம் போறார்கள். அதே போல தான் விஜய்யும் சுற்றுப்பயணம் செல்ல போகிறார். இதுவரை தலைவர்கள் சென்ற சுற்றுப்பயணத்தை விடவும் விஜய் மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணம் வேற லெவலில் இருக்கும். ஒரு ஃபயராக இருக்கும். கவலையே பட வேண்டாம். சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, பாலாஜி இந்த வேலையை பாருங்க என்று எனக்கு அழைப்பு வந்தால், நிச்சயம் செய்வேன். சிறப்பாக செய்வேன். அவர் சந்தோஷப்படுகின்ற அளவுக்கு சிறப்பாக செய்வேன். நிச்சயமாக அழைப்பார் என்று நம்புகிறேன்.
ஒற்றுமையாக செயல்பட வேண்டும்
நாம் எல்லாரும் ஒற்றுமையாக இருந்தால் தான் மட்டுமே 2026ல் ஆட்சியை பிடிக்க முடியும். நாம் ஒற்றுமையா இருந்தால் தான் தலைவரை அரியணையில் அமர வைக்க முடியும். நிர்வாகிகள், தொண்டர்கள் எல்லாரும் ஒன்னா இருக்கனும்.
ஒரு இடத்தில் ஒரு நிகழ்ச்சி நடக்குது என்றால் அதற்கு எல்லாரும் சப்போர்ட் பண்ணுங்க.. அத சப்போர்ட் பண்ணி அடுத்த லெவலுக்கு கொண்டு போகனும். எல்லாரும் உழைக்கிறதே தளபதி விஜய்க்காக தான். எனவே தளபதி விஜய் வரும் தேர்தலில் வெற்றி பெறுவார். அவர் பின்னாடி நான் நிற்பேன்" என்றார்.
விஜய்யின் தவெக கட்சி
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருந்து வரும் தளபதி விஜய், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது அரசியல் பயணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாகவும், கமிட்டாகி உள்ள படங்களில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடபோவதாகவும் தெரிவித்தார். இதன் பின்னர் தமிழ்நாட்டில் நிகழும் அரசியல் நிகழ்வுகள் குறித்து அறிக்கைகளும், விமர்சனங்களையும் வெளிப்படுத்தி வந்தார்.
இதைத்தொடர்ந்து ஆக்ஸட் மாதம் 22ஆம் தேதி தனது கட்சியின் கொடியை வெளியிட்ட நிலையில், அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரத்தில் வைத்தி கட்சி முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். தற்போது தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்துக்கொண்டே அரசியலில் ஈடுபட்டு வரும் விஜய், அடுத்த ஆண்டில் மக்களை நேரில் சென்று சந்திக்கும் கள அரசியலில் ஈடுபட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் விஜய்யின் சுற்றுப்பயணம் குறித்த முறையான அறிவிப்பும் வெளியாகலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.