நாக சைதன்யா - ஷோபிதா துலிபாலா தம்பதிக்கு முதல் குழந்தை பிறக்கப் போகுதா? வைரலாகும் செய்தி! உண்மை என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நாக சைதன்யா - ஷோபிதா துலிபாலா தம்பதிக்கு முதல் குழந்தை பிறக்கப் போகுதா? வைரலாகும் செய்தி! உண்மை என்ன?

நாக சைதன்யா - ஷோபிதா துலிபாலா தம்பதிக்கு முதல் குழந்தை பிறக்கப் போகுதா? வைரலாகும் செய்தி! உண்மை என்ன?

Malavica Natarajan HT Tamil
Published May 06, 2025 11:32 AM IST

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் ஷோபிதா துலிபாலா திருமணம் ஆகி 5 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது ஷோபிதா கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி எங்கும் பரவி வருகிறது. இந்த வதந்தி பரவ காரணம் என்ன என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

நாக சைதன்யா - ஷோபிதா துலிபாலா தம்பதிக்கு முதல் குழந்தை பிறக்கப் போகுதா? வைரலாகும் செய்தி! உண்மை என்ன?
நாக சைதன்யா - ஷோபிதா துலிபாலா தம்பதிக்கு முதல் குழந்தை பிறக்கப் போகுதா? வைரலாகும் செய்தி! உண்மை என்ன?

சோபிதா துலிபாலா கர்ப்பமா?

மும்பையில் நடந்த WAVES 2025 என்ற நிகழ்ச்சியில் நடிகை ஷோபிதா துலிபாலா தனது வயிறு தெரியாதபடி புடவையை மூடியிருந்தார், ஆனால் வயிற்றுப் பகுதி சற்று பெரிதாக தெரிந்தது. இதனுடன் சமீபத்தில் ஷோபிதா தளர்வான ஆடைகளை அணிந்து வருவதும் இந்தப் பேச்சுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

ஆனால் ஷோபிதா கர்ப்பமாக இருக்கிறார் என்ற விஷயத்தை நாக சைதன்யா குடும்பத்தின் நெருங்கிய வட்டாரங்கள் மறுத்துள்ளனர். அவர்கள், ஷோபிதா கர்ப்பமாக இல்லை. அவர் ஆன்டி ஃபிட் உடை அணிந்திருந்தார். அதில் வயிற்றுப் பகுதி பெரிதாக தெரிந்தது, அது அவர் கர்ப்பமாக இருப்பது போல் பிரதிபலித்தது என்று கூறியுள்ளனர்.

சைதன்யா- சோபிதா திருமணம்

நாக சைதன்யா மற்றும் ஷோபிதா ஆகியோர் தங்கள் உறவு பற்றி, தங்கள் தனிப்பட்ட விஷயங்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் எங்கும் வெளிப்படுத்துவது இல்லை. இந்த ஜோடி கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி அன்று ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இவர்கள் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி அன்று அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

மேலும் படிக்க| பெரியவங்களுக்கான ஓடிடியா? இந்த ஓடிடி தளங்களில் அப்படி என்னதான் இருக்குன்னு தெரிஞ்சிக்கணுமா?

சமந்தா- சைதன்யா

சுமந்தா மற்றும் நாக சைதன்யா 2017 ஆம் ஆண்டு முதல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின் 2021 ஆம் ஆண்டு இந்த ஜோடி விவாகரத்து பெற்றுக்கொண்டது. இதன் பின் 3 வருடங்களுக்கு பிறகு நாக சைதன்யா–ஷோபிதா துலிபாலா திருமணம் செய்து கொண்டனர்.

தயாரிப்பாளரான சமந்தா

இதுவரை தனியாக இருந்த சமந்தா இயக்குனருடன் விரைவில் நிச்சயதார்த்தம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற செய்தியும் ஒரு புறம் பரவி வருகிறது. சமந்தா ரூத் பிரபு முதன்முறையாக தயாரிப்புத் துறையில் கால் பதிக்கிறார். சமந்தாவின் தயாரிப்பில் உருவாகும் முதல் படம் 'சுபம்'. டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் சார்பில் சமந்தா தயாரிக்கும் இப்படத்தை பிரவீன் கந்த்ரேகுலு இயக்கியுள்ளார்.

ரசிகர்கள் உருக்கம்

அந்த படத்தின் நிகழ்வின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது, அதில் சமந்தா கண்ணீரை அடக்க முடியாமல் உணர்ச்சிவசப்பட்டு அழுகிறார். சமந்தா சிரிக்கும் ஒரு காட்சியும் வீடியோவில் உள்ளது, ஆனால் அவரது கண்கள் கண்ணீரால் நிறைந்துள்ளதாக ரசிகர்கள் பலரும் அவருக்காக வருத்தம் தெரிவித்தனர். பின் சமந்தா ரசிகர்களுக்கு அதற்கான விளக்கத்தை அளித்தார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், விடியல் தொலைக்காட்சி, ஈ டிவி பாரத், வே 2 நியூஸ், ஆதன் தமிழ் மீடியா ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner