சட்டம் ஒழுங்கில் எந்த சமரசமும் இல்லை.. கறாராக சொன்ன தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி.. சிரஞ்சீவி ஆப்சென்ட்.. பின்னணி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சட்டம் ஒழுங்கில் எந்த சமரசமும் இல்லை.. கறாராக சொன்ன தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி.. சிரஞ்சீவி ஆப்சென்ட்.. பின்னணி

சட்டம் ஒழுங்கில் எந்த சமரசமும் இல்லை.. கறாராக சொன்ன தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி.. சிரஞ்சீவி ஆப்சென்ட்.. பின்னணி

Marimuthu M HT Tamil
Dec 26, 2024 02:24 PM IST

சட்டம் ஒழுங்கில் எந்த சமரசமும் இல்லை.. கறாராக சொன்ன தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி.. சிரஞ்சீவி ஆப்சென்ட்.. பின்னணி குறித்துப் பார்ப்போம்.

சட்டம் ஒழுங்கில் எந்த சமரசமும் இல்லை.. கறாராக சொன்ன தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி.. சிரஞ்சீவி ஆப்சென்ட்.. பின்னணி
சட்டம் ஒழுங்கில் எந்த சமரசமும் இல்லை.. கறாராக சொன்ன தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி.. சிரஞ்சீவி ஆப்சென்ட்.. பின்னணி

புஷ்பா 2 தி ரூல் திரைப்படத்தின் ரசிகர் காட்சி, டிசம்பர் 4ஆம் தேதி இரவு 10 மணிக்குப் போடப்பட்டது. அப்போது ஹைதராபாத்தில் சந்தியா தியேட்டரில் நடந்த ரசிகர் காட்சியில் அல்லு அர்ஜூன் படத்தைப் பார்த்து ரசித்தார். இதனால் அவரை நேரில் பார்க்க ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகன் ஸ்ரீதேஜ் என்பவரும் நினைவிழந்தார். அதனைத்தொடர்ந்து அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார்.

பின்னர் தெலங்கானா சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ரசிகர் மன்றக் காட்சிகளை அனுமதிக்கமாட்டேன் என்றும்; எந்தவொரு சலுகையும் திரையுலகினருக்கு வழங்கப்படாது என அறிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து தெலுங்கு திரையுலக பிரபலங்களும் ஒன்றிணைந்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை இன்று (டிசம்பர் 26) சந்தித்தனர். இந்த கூட்டத்தில் முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒவ்வொருவராக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியிடம் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் டகுபதி சுரேஷ் பாபு

இந்தச் சூழலில் ஓடிடி தொடர்பான பிரச்னைகள் குறித்து பேசிய தயாரிப்பாளர் டகுபதி சுரேஷ் பாபு,"எங்களுக்கு அரசு மீது நம்பிக்கை உள்ளது. ஹைதராபாத்தை சர்வதேச திரைப்பட இடமாக மாற்றுவதே கனவு. அந்த நாட்களில் சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு திரையுலகம் வந்தது அரசாங்கத்தின் உதவியுடன்தான்.

நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ஓடிடி உள்ளிட்ட அனைத்து ஓடிடி தளங்களுக்கும் ஹைதராபாத் தலைமை மையமாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கருத்து:

அப்போது பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ‘’சட்டம் ஒழுங்கில் எந்த சமரசமும் இல்லை. இனிமேல், பவுன்சர்களை நாங்கள் தீவிரமாக கண்காணிப்போம். ரசிகர்களை கட்டுப்படுத்துவது பிரபலங்களின் பொறுப்பு. திரைப்படத் தொழில் துறையினருக்கு அரசு ஆதரவாக இருக்கும்.

தெலங்கானா வளர்ந்து வரும் நிலையில், திரைப்படத்துறை வாயிலாக சமூக ரீதியாக பதிலளிக்க வேண்டும். போதைப்பொருள் பிரசாரம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரசாரத்தில் திரைப்படத்துறையினர் முன்முயற்சி எடுக்கவும். கோயில் சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலாவை திரைப்படத்துறையினர் உதவ வேண்டும்.

திரைப்படத் துறையினரும் முதலீடுகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். டோலிவுட்டுக்கு அரசு முழு ஆதரவு அளிக்கிறது. சந்தியா தியேட்டர் சம்பவத்தால் நாங்கள் வருத்தப்படுகிறோம்.

ஒரு பெண்ணின் உயிர் இழப்புக் காரணமாக எங்கள் அரசாங்கம் இந்தச் சம்பவத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இனி ரசிகர் மன்ற ஷோக்கள் தியேட்டர்களில் இருக்காது. சட்டசபையில் நாங்கள் கூறியதில் உறுதியாக இருக்கிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

முரளி மோகன் கருத்து:

அதைத்தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் முரளி மோகன், ‘’தேர்தல் முடிவைப் போலவே, படம் வெளியாகும் முதல் நாளும் இருக்கும். சந்தியா தியேட்டர் சம்பவம் எங்களை காயப்படுத்தியுள்ளது. படத்தின் வெளியீட்டில், போட்டி காரணமாக விளம்பரம் முக்கியமானதாகிவிட்டது.

திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாவதால், நாங்கள் அதை விரிவாக விளம்பரப் படுத்துகிறோம்’’ என்றார்.

ராகவேந்திர ராவ் கருத்து:

பின்னர் பேசிய இயக்குநர் ராகவேந்திர ராவ் கூறுகையில், ‘’அனைத்து முதலமைச்சர்களும் திரைத்துறையை நன்றாக கவனித்துக் கொண்டுள்ளனர். இந்த அரசாங்கமும் எங்களை நன்றாக கவனித்துக் கொள்கிறது.

தெலங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக தில் ராஜு நியமிக்கப்பட்டதை நான் வரவேற்கிறேன். தெலங்கானாவில் அற்புதமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

கடந்த காலங்களில் சந்திரபாபு நாயுடு ஹைதராபாத்தில் குழந்தைகள் திரைப்பட விழாவை ஏற்பாடு செய்திருந்தார்.

இப்போதும் சர்வதேச திரைப்பட விழா ஹைதராபாத்தில் நடத்த வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்’’ என இயக்குநர் ராகவேந்திர ராவ் தெரிவித்தார்.

நாகார்ஜுனா கருத்து:

அதனைத்தொடர்ந்து பேசிய உச்ச நடிகர் நாகார்ஜூனா, ‘’ உலகளாவிய அளவில் ஒரு ஸ்டுடியோ அமைப்பு இருக்க வேண்டும். அரசு மூலதன ஊக்கத்தொகை வழங்கினால் மட்டுமே திரைப்படத் துறை உலக அளவில் வளரும்.

ஹைதராபாத் உலகின் சினிமா தலைநகராக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்'' என்று தன் கருத்தை நடிகர் நாகார்ஜூனா கூறினார்.

தயாரிப்பாளர் ஷியாம் பிரசாத் ரெட்டி கருத்து:

பின்னர் பேசிய தயாரிப்பாளர் ஷியாம் பிரசாத் ரெட்டி கூறுகையில், ‘’ சிறிய விஷயங்களை புறக்கணிக்காதீர்கள். நான் சிறு வயதில் இருந்தே சினிமா பார்த்து வருகிறேன்.

ஹைதராபாத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள்’’எனத் தெரிவித்தார்.

இதில் டோலிவுட் பிரபலங்கள் தில் ராஜு, அல்லு அரவிந்த், டகுபதி சுரேஷ் பாபு, ஹீரோ நாகார்ஜுனா, வெங்கடேஷ், கிரண் அப்பாவரம், சித்து ஜொன்னாலகட்டா, நிதின், ராகவேந்திர ராவ், திரிவிக்ரம், ஹரீஷ் சங்கர், நாக வம்சி மற்றும் மொத்தம் 36 பேர் கலந்து கொண்டனர். மெகா ஸ்டார் சிரஞ்சீவி கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இந்நிகழ்வில் பங்கெடுக்கவில்லை.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.