"லட்டுல வெச்சேன்னு நெனச்சியா தாஸ்".. ரிவியூவர்களுக்கு கடிவாளம் போட கோர்ட்டுக்கு போன புரொடியூசர்ஸ்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  "லட்டுல வெச்சேன்னு நெனச்சியா தாஸ்".. ரிவியூவர்களுக்கு கடிவாளம் போட கோர்ட்டுக்கு போன புரொடியூசர்ஸ்..

"லட்டுல வெச்சேன்னு நெனச்சியா தாஸ்".. ரிவியூவர்களுக்கு கடிவாளம் போட கோர்ட்டுக்கு போன புரொடியூசர்ஸ்..

Malavica Natarajan HT Tamil
Published Dec 03, 2024 01:06 PM IST

படம் வெளியாகி 3 நாட்களுக்கு சோசியல் மீடியாக்களில் எந்தவொரு விமர்சனங்களும் வெளியிடக் கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம் நீதிமன்றத்தில் புகாரளித்துள்ளது.

"லட்டுல வெச்சேன்னு நெனச்சியா தாஸ்".. ரிவியூவர்களுக்கு கடிவாளம் போட கோர்ட்டுக்கு போன புரொடியூசர்ஸ்..
"லட்டுல வெச்சேன்னு நெனச்சியா தாஸ்".. ரிவியூவர்களுக்கு கடிவாளம் போட கோர்ட்டுக்கு போன புரொடியூசர்ஸ்..

ரிவ்யூக்களுக்கு தடை கோரி மனு

தயாரிப்பாளர் சங்கத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், தமிழ்நாட்டில் ஒரு படம் வெளியாகி 3 நாட்களுக்கு பிறகு தான் எந்தவித விமர்சனங்களையும் யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் தளம் போன்ற சமூக வலைதளங்கள் வெளியிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

சோசியல் மீடியாவில் கண்டனம்

தயாரிப்பாளர் சங்கத்தினர் அளித்த இந்த புகார் வெளியில் தெரியவந்ததை அடுத்து, இது சோசியல் மீடியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விமர்சனங்களால் படம் தோல்வியை சந்திக்கிறது என கூறிவரும் நிலையில், தயாரிப்பாளர்கள் ரசிகர்களின் கருத்து சுதந்திரத்தையே பாதிக்கும் வகையிலான வேலையில் இறங்கி இருக்கின்றனர் எனக் கூறி வருகின்றனர்.

கொண்டாட்டத்தில் தியேட்டர் உரிமையாளர்கள்

தமிழ்நாட்டில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முக்கிய நடிகர்களின் படம் வெளியாகிறது என்றாலே தியேட்டர் உரிமையாளர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். ஏனென்றால் அவர்களது ரசிகர்கள் திரும்பத் திரும்ப படம் பார்க்க வந்து வசூலை அதிகரிப்பர். இதனால், படம் விநியோகஸ்தர்கள் மட்டுமின்றி படம் தயாரித்தவர்கள், படத்தை இயக்கியவர்கள், நடித்தவர்கள் என அனைவரும் லாபம் அடைவார்கள்.

திரையரங்க வசூல் பாதிப்பு

ஆனால், சமீப காலங்களில் சினிமா ரசிகர்களின் விருப்பங்கள் மாறி வருவதால், தியேட்டர்களின் வசூல் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஓடிடி தளங்களின் வருகை ஒருபுறம் சினிமா ரசிகர்களை தியேட்டருக்கே வரவிடாமல் செய்கிறது. அப்படி படத்திற்கு வரும் சிலரோ அதை திருட்டுத் தனமாக பதிவு செய்து இணையத்தில் வெளியிடுகின்றனர்.

அப்படியும் இல்லையா, தியேட்டருக்கு போய் படம் பார்க்கலாம் என நினைப்போரை, விமர்சனங்கள் எனும் பெயரால் அப்படியே தடுத்து நிறுத்தி விடுகின்றனர். இதனால், நாளுக்கு நாள் தியேட்டருக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைகிறது. தற்போது சினிமா விமர்சனங்களைத் தாண்டி, தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள் அதிகமாகி அவை விமர்சனங்களாக வெளிவந்து, ஒட்டுமொத்த படக்குழுவையும் பாதிக்கிறது.

சரிவை சந்தித்த ஸ்டார் படங்கள்

இதுபோன்ற பிரச்சனைகளில் சிக்கி தான், கமல் ஹாசனின் இந்தியன் 2, ரஜினி காந்த்தின் வேட்டையன், சூர்யாவின் கங்குவா போன்ற படங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன.

பப்ளிக் ரிவ்யூ நிகழ்ச்சிகளுக்கு தடை

முன்னதாக அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த YouTube Channel-களும் எடுக்க தடை செய்து, இந்த FDFS Public Review/Talk நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்" என தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டது.

மேலும், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என திரையரங்கம் மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சில ஆலோசனைகளை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.