எதார்த்த வில்லன்.. பின்லேடன் கெட்டப்பில் ராணுவத்தினரிடம் மாட்டிக்கொண்ட ஓ.ஏ.கே சுந்தர் - பர்த்டே ஸ்பெஷல்
சினிமாவில் வில்லன், நிஜத்தில் பல நடிகர்களோடு நட்புடன் பழககூடியவராகவும், பல இயக்குநர்களின் ஆஸ்தான நடிகராகவும் இருப்பவர் ஓ.ஏ.கே. சுந்தர். ஜனவரி 3ஆம் தேதியான இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவரது சினிமா பயணத்தை பார்க்கலாம்

தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் வில்லன், வில்லனத்தனமான வேடங்களில் தோன்றி தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களை கவர்பவர் நடிகை ஓ.ஏ.கே. சுந்தர். சுமார் 6.1 அடி உயரத்தில் ஆஜானுபாகு தோற்றத்தில் இருக்கும் நெகடிவ் கதாபாத்திரங்களுக்கு பொருந்தமான நடிகராகவே இருந்துள்ளார்.
பழம்பெரும் சினிமா வில்லன் நடிகர் ஓ.ஏ.கே. தேவர் மகனான இவர் சினிமாக்களில் 1990களில் இருந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் வெண்கல குரலோன் என்று அழைக்கப்பட்டவர் ஓ.ஏ.கே. தேவர். நாடக நடிகராக இருந்து, சினிமாவுக்கு வந்து வெற்றிகரமாக நடிகராக வலம் வந்தார். இவரது மகனான ஓ.ஏ.கே. சுந்தரை திருமண நிகழ்ச்சி ஒன்றில் பார்த்த சங்கிலி முருகன் நடிகராக்கினார். 1992இல் வெளியான நாடேடி பாட்டுக்காரன் படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமான இவர் தொடர்ந்து செந்தூர பாண்டியன், தேவா, ரகசிய போலீஸ் போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.