Producer Jayamurugan: மாரடைப்பால் உயிரிழந்த தயாரிப்பாளர் ஜெயமுருகன் யார்? அவரது படங்கள் என்ன?
Producer Jayamurugan Died: தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முக கலைஞராக வலம் வந்தவர் ஜெயமுருகன். பெரிய ஹிட் படங்களை கொடுக்கவில்லை என்றாலும் இவரது படம் ரிலீஸ் காலகட்டத்தில் கவனம் பெற்ற படங்களாக இருந்தன.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி பின்னர் இயக்குநர் மற்றும் இசையமைப்பாளராக வலம் வந்தவர் டி.என். ஜெயமுருகன். தனது சொந்த ஊரான திருப்பூரில் வசித்து வந்த இவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழப்பு
சினிமாவை விட்டு விலகி இருந்து வந்த ஜெயமுருகன், திருப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஜெய முருகனின் உடல் திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜெயமுருகனின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்வர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
ஜெயமுருகன் சினிமா பயணம்
மனிதன் சினி ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமான டி.என். ஜெயமுருகன். 1995இல் வெளியான இந்த படத்தில் மன்சூர் அலிகான் ஹீரோவாக நடித்திருந்தார். கஸ்தூரி, சங்கவி, ஆர். சுந்தர்ராஜன், செந்தில் உள்பட பலர் நடித்து பாலு ஆனந்த் இயக்கியிருந்த இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை.
இதைத்தொடர்ந்து 1997இல் வெளியான ரோஜா மலரே படம் மூலம் இயக்குநராக உருவெடுத்தார். முரளி, ரீவா, அருண் பாண்டியன், ஆனந்த பாபு. செந்தில் உள்பட பலர் நடித்த இந்த படம் கலவையான விமர்சனங்களுடன் சராசரி வெற்றியை பெற்றது. இந்த படத்தில் சிறு கதாபாத்திரத்திலும் ஜெயமுருகன் நடித்திருப்பார். படத்தில் இடம்பெறும் அழகோவியம் என்ற பாடல் கிளாசிக் மெலடியாக மாறியது. இந்த பாடல் வரிகளை ஜெய முருகன் தான் எழுதியுள்ளார். அத்துடன் பாடல் காட்சியை அரேபிய கடலில் உள்ள புனித மேரி தீவு பகுதிகளில் படமாக்கி இருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதன் பின்னர் 12 ஆண்டுகள் கழித்து அடடா என்ன அழகு என்ற படத்தை இவர் இயக்கினார். இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் மாறினார். ஆனால் படம் எதிர்பாரத்த வெற்றியை பெறவில்லை.
பின் மீண்டும் 14 ஆண்டுகள் கழித்து தீ இவன் என்ற படம் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த படத்தில் கார்த்திக், சுகன்யா ஆகியோர் நடித்திருந்த நிலையில், பாலிவுட் நடிகையான சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களையும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்