Tamil Debut Director: பெரியம்மா வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்..! சினிமாவாக்கிய அறிமுக இயக்குநர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Debut Director: பெரியம்மா வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்..! சினிமாவாக்கிய அறிமுக இயக்குநர்

Tamil Debut Director: பெரியம்மா வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்..! சினிமாவாக்கிய அறிமுக இயக்குநர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Aug 22, 2024 09:58 AM IST

பெரியம்மா வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து சினிமாவக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி. ஊர்வசி நடித்து இவர் இயக்கிய ஜே பேபி படம் இந்த ஆண்டில் கவனம் ஈர்த்த படமாக உள்ளது.

Tamil Debut Director: பெரியம்மா வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்..! சினிமாவாக்கிய அறிமுக இயக்குநர்
Tamil Debut Director: பெரியம்மா வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்..! சினிமாவாக்கிய அறிமுக இயக்குநர்

இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், லொள்ளு சபா மாறன் போன்ற மிகவும் குறைவான அறிந்த முகங்களே நடித்திருப்பார்கள். மற்றவர்கள் அனைவரும் புதுமுகங்களாகவும், ரியல் லைஃப் கேரக்டர்களாகவும் இருப்பார்கள். பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன் இந்த படத்தை தயாரித்தது

உண்மை கதை

கணவன் மறைவு, பெற்ற மகன்களுக்கு இடையே பிரிவு என குடும்ப சூழ்நிலையால் மனஉளைச்சலுக்கு ஆளாகும் ஊர்வசி, அக்கம் பக்கத்தினருக்கு பிரச்னை ஏற்படுத்தும் சில விஷயங்களை செய்கிறார். பின்னர் காணாமல் போகும் அவர் கொல்கத்தாவில் இருப்பது தெரியவர, மகன்கள் அவரை அங்கிருந்து மீட்டு வருவது தான் படத்தின் கதை.

உண்மை கதையை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருப்பதாக படம் தொடங்கும் முன்னரே தெரிவிக்கப்படும். அதற்கு ஏற்ப உண்மை கதையில் காணாமல் போன பெண்ணை கொல்கத்தாவில் மீட்ட தமிழ்நாட்டை சேர்ந்தவரை அதே கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்க வைத்திருப்பார்கள்.

பெரியம்மா வாழ்க்கையில் நடந்த சம்பவம்

இந்த படம் பற்றி இயக்குநர் சுரேஷ் மாரி பிரபல ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ஜே பேபி படம் என் பெரியம்மா வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக, சினிமாக்களில் புகழ் பெற்ற தலைவர், விஞ்ஞானிகளின் வாழ்க்கையை பற்றி படம் எடுப்பார்கள்.

ஆனால் எனது பெரியம்மா வாழ்க்கையை படமாக்க விரும்பினேன். அவர்கள் சுவாரஸ்யமான நபர் என்பதால் நான் தேர்வு செய்தேன். அவர்களால் அக்கம்பக்கத்தில் நிறைய பிரச்னைகளை உருவாகும். ஆனால் அந்த பிரச்னைகள் அவர் நல்லது செய்கிறேன் என முயற்சிப்பதால் வந்தன.

ஒவ்வொரு தெருவிலும் ஜே பேபி போன்றோர் பலர் உள்ளார்கள். அவர்களது வாழ்க்கையிலும் சுவாரஸ்யமான சம்பவங்கள் இருக்கும். அதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நம்புகிறேன்." என்று கூறினார்.

ஊர்வசிக்கு பதிலாக மற்றொரு மூத்த நடிகை

"இந்த படத்தின் கதை எழுதும் போது, ​நிஜமானவரின் குணாதிசயத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதால் யாரையும் மனதில் கொள்ளவில்லை. இந்த கேரக்டரில் நடிக்க எனது முதல் விருப்பம் ஊர்வசியாகத்தான் இருந்தது. ஆரம்பத்தில் அவரை அணுகியபோது படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இதனால் அந்த கேரக்டருக்காக ராதிகாவை அணுக நினைத்தேன். ஆனால் நான் கதையை ஊர்வசியிடம் மீண்டும் தெளிவாக சொன்னபோது, ​​நன்றாக இருப்பதாக கூறினார். இருப்பினும் பாட்டியாக நடிப்பதில் தயக்கம் இருந்தது. அவரால் இந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

அதற்கு ஏற்ப ரியல் லொக்கேஷன்களில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தினார். சில காட்சிகளில் அவரது நடிப்பை பார்த்து நான் கண்ணீர் விட்டேன்" என்று படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது இயக்குநர் சுரேஷ் மாரி தெரிவித்திருந்தார்.

தமிழில் தாய் பாசத்தை வைத்தும், அம்மா சென்டிமெண்ட் படங்களும் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படைப்பாக அறிமுக இயக்குநர் ஜே பேபி இருந்தது.

பெரிய ஸ்டார்கள் இல்லாமல் இந்த ஆண்டில் வெளியான படங்களில் கவனம் ஈர்த்த படமாகவும், தமிழ் சினிமாவில் முக்கிய படமாகவும் ஜே பேபி மாறியுள்ளது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இந்த படம் ஸ்டிரீம் ஆகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: