HBD Vairamuthu: காலத்துக்கு ஏற்ப தன்னை புதுப்பித்து கொள்ளும் கவிஞன்! நான்கு தசாப்தங்களாக மக்களை மகிழ்விக்கும் கலைஞன்
நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் திரையுலகில் தனது பாடல் வரிகளால் மக்களை மகிழ்வித்து வரும் கலைஞன் ஆக இருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, காலத்துக்கு ஏற்ப தன்னை புதுப்பித்து கொள்ளும் கவிஞன் ஆகவும் ஜொலிக்கிறார்.

காலத்துக்கு ஏற்ப தன்னை புதுப்பித்து கொள்ளும் கவிஞன் கவிப்பேரரசு வைரமுத்து
தமிழ் சினிமாவில் கடந்த நான்கு தசாப்தங்களாக தனது தமிழாலும், இசை வழியே பாடல்களின் தமிழர்களின் மனங்களில் குடியிருப்பவர் கவிப்பேரரசு வைரமுத்து. இவரது பெயரை உச்சரத்திலே அழகு தமிழும், கணீர் குரலில் இவரது தமிழ் உச்சரிப்பும், மிக முக்கியமாக வெள்ளை ஜிப்பா அணிந்த இவரது தோற்றமும் நினைவுக்கு வரும். தேனி மாவட்டம் வடுகப்பட்டி தான் இவரது சொந்த ஊர்.
தமிழ் மீதான ஆர்வம்
விவசாய குடும்பத்தை சேர்ந்த வைரமுத்து, தமிழ் மீதான பற்றால் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழில் முதுகலை பட்டம் படித்தார்.
தனது பத்தாவது வயதிலேயே கவிதைகள் எழுதும் பழக்கத்தை கொண்டவராக இருந்த வைரமுத்து, பதின்ம வயதில் வெண்பாக்கள் எழுதும் அளவில் தன்னை வளர்த்து கொண்டார்.