உப்பு தர முடியாது! பிடிவாதம் பிடிக்கும் பெண்கள் அணியினர்! பிக்பாஸில் களேபரம்!
பிக்பாஸ் சீசன் 8 தொடங்கி 2 ஆம் நாளான இன்று ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு வாக்குவாதம் தொடங்கியுள்ளது.
விஜய் டிவியின் பிரதான நிகழ்ச்சியான பிக்பாஸ் 8 இரு தினங்களுக்கு முன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த முறை “ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” என நடிகர் விஜய் சேதுபதி தொகுத்த வழங்குகிறார். இரு தினங்களுக்கு முன் இந்த சீசன் கோலாகலமாக தொடங்கியது.
இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் நேற்று சாச்சனா முதல் போட்டியாளராக எலிமெண்ட் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்த முறை உள்ளே போட்டியாளர்கள் ஆண்கள், பெண்கள் எனத் தனி தனியாக பிரிக்கபட்டனர். அவர்கள் இருவருக்கும் தனித் தனியாக டாஸ்க் வழங்கப்படுகிறது.
முதல் டாஸ்க்
பிக்பாஸ் வீட்டில் முதல் எலிமினேஷன் நடந்த பிறகு போட்டியாளர்களுக்கான முதல் டாஸ்க் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களா பெண்களா என நடக்கும் இந்தப் போட்டிக்கான விதிமுறைகளை தீபக் வாசித்தார். இதையடுத்து இரு அணிகளும் தங்கள் அணி சார்பில் விளையாடப்போகும் அந்த நபர் யார் என்பது குறித்த ஆலோசனையில் இரு அணிகளும் ஈடுபட்டனர். ஆண்கள் அணியில் இதுகுறித்து அனைவரும் மிக நுணுக்கமாக, என்ன செய்ய வேண்டும், என்ன நடக்கும் என விவாதித்து வந்தனர்.
இது பவித்ராவிற்கும், ஜாக்குலினிற்கும் வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. இருவரும் ஆளுக்கு ஆள் ஒரு பக்கம் கண்ணீர் விட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வாக்குவாதம் தொடர்ந்த நிலையில் நடுவில் தர்ஷிதாவும் செல்வதாக தெரிவித்தார்.
ஆண்கள் வீட்டின் விதிகள்
தற்போது பிக்பாஸ் வீட்டின் மூன்றாவது புரோமா வெளியாகி உள்ளது. இதில் முத்துக் குமார் ஆண்கள் வீட்டின் விதிகளை வாசித்து காண்பித்தார். அதில் ஆண்கள் வீட்டில் இருக்கும் ஸ்டோர் ரூம் வர வேண்டும் என்றால் ஆண்களின் அனுமதி இல்லாமல் வரக்கூடாது என வாசிக்கிறார். இதனை அடுத்து ஆண்கள் அணிக்கு தேவைப்படும் உப்பு பெண்களிடம் இருப்பதால் அதனை கொடுத்தால் காய்கறி சாமான்களை தருவதாக முடிவு எடுக்கின்றனர்.
இந்த முடிவை பெண்கள் அணியிடம் தெரிவிக்கும் போது பெண்கள் தீவிரமாக உப்பு தர முடியாது என மறுக்கின்றனர். இதனை அடுத்து நீங்கள் உப்பு தந்தால் மட்டுமே நாங்கள் காய்கறிகள் எடுக்க அனுமதிப்போம் எனவும் எச்சரிக்கன்றனர்.
அசராத பெண்கள் அணி
இவை அனைத்தும் தெரிந்த பின்னும் ஜாக்குலின், தர்ஷா குப்தா, சுனிதா ஆகியோர் சேர்ந்து எங்களால் உப்பு கொடுக்க முடியாது என உறுதியாக தெரிவித்து விட்டனர். இதனால் கடுப்பான ரவீந்தர், எல்லா காய்கறிகளையும் எடுத்து பூட்டி வைக்க சொல்கிறார். மேலும் ஜெஃப்ரி காய்கறிகளை எடுத்து வைக்கிறார். தொடங்கிய 2 நாட்களிலேயே இந்த அளவிலான சண்டை பிக்பாஸ் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆளாக்கியுள்ளது. மேலும் இந்த சீசன் மக்கள் எதிர்பார்த்ததை தாண்டி அதிக அமளி துமளியாக இருக்கப் போவதாக தெரிகிறது. பிக்பாஸ் தற்போது விஜய் சேதுபதி சனிக்கிழமை அன்று பேசப் போகும் விஷயங்களை மக்கள் ஆவலாக எதிறப்பார்த்து உள்ளனர். கடந்த இரண்டு சீசன்களில் கமல் ஹாசன் ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டார் என்ற விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்