தெரிஞ்சு தான் சொல்ல வில்லையா! பவித்ராவை மாட்டிவிட்ட விஜய் சேதுபதி! பிக்பாஸ் இன்று!
பிக்பாஸில் இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் பவித்ரா செய்த செயல் குறித்து விஜய் சேதுபதி கேள்வி எழுப்பி தர்ஷிகாவின் கருத்தை தெரிவிக்க சொல்கிறார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த 8 ஆவது சீசன் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. மற்ற எந்த சீசங்களிலும் இல்லாத வாறு இந்த சீசனில் புது விதமான விதிமுறைகளை பிக்பாஸ் அறிமுகப் படுத்தியுள்ளார். பிக்பாஸ் தொடங்கிய முதல் நாளில் இருந்தே சண்டைகள், வாக்கு வாதம், பிராங்க் என சுவாரசியமாக உள்ளது. மேலும் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வந்த கமல் ஹாசனிற்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசன் “ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைக்கபட்டுள்ளது.
ஆண்கள் அணியின் பிராங்க்
பிக்பாஸ் தொடங்கிய போதே ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனி அணியாக பிரிக்கப்பட்டது. மேலும் வீடும் இரண்டாக கோடு போட்டு பிரிக்கப்பட்டு இருந்தது. இதுவே போட்டியாளர்களுக்கு இடையே பல பிரச்சனைகளை கொண்டு வந்தது எனக் கூறலாம். உதாரணமாக ஆண்கள் அணி பகுதிக்கு பெண்கள் அணியினர் போக கூடாது என்ற விதிமுறையால் உப்பு மற்றும் காய்கறி சாமான்களுக்காக போட்டியாளர்கள் அடித்துக் கொண்டனர்.
இந்நிலையில் வெளியேறுவதற்கான நாமினேஷன் பட்டியலுக்கு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நாமினேஷன் பட்டியலில் இருக்கும் ஜாக்குலின், பேட்மேன் ரவி, அருண், முத்துகுமரன், சௌந்தர்யா மற்றும் ரஞ்சித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் இருந்து தப்பிக்க ரஞ்சித் மற்றும் ரவீந்தர் சக போட்டியாளர்களை பிராங்க் செய்தனர். இருவரும் சண்டையிடுவது போல நடித்தனர். இத் பிராங்க் என தெரிந்ததும் மற்ற போட்டியாளர்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.