தெரிஞ்சு தான் சொல்ல வில்லையா! பவித்ராவை மாட்டிவிட்ட விஜய் சேதுபதி! பிக்பாஸ் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தெரிஞ்சு தான் சொல்ல வில்லையா! பவித்ராவை மாட்டிவிட்ட விஜய் சேதுபதி! பிக்பாஸ் இன்று!

தெரிஞ்சு தான் சொல்ல வில்லையா! பவித்ராவை மாட்டிவிட்ட விஜய் சேதுபதி! பிக்பாஸ் இன்று!

Suguna Devi P HT Tamil
Published Oct 13, 2024 01:10 PM IST

பிக்பாஸில் இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் பவித்ரா செய்த செயல் குறித்து விஜய் சேதுபதி கேள்வி எழுப்பி தர்ஷிகாவின் கருத்தை தெரிவிக்க சொல்கிறார்.

தெரிஞ்சு தான் சொல்ல வில்லையா! பவித்ராவை மாட்டிவிட்ட விஜய் சேதுபதி! பிக்பாஸ் இன்று!
தெரிஞ்சு தான் சொல்ல வில்லையா! பவித்ராவை மாட்டிவிட்ட விஜய் சேதுபதி! பிக்பாஸ் இன்று!

ஆண்கள் அணியின் பிராங்க் 

பிக்பாஸ் தொடங்கிய போதே ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனி அணியாக பிரிக்கப்பட்டது. மேலும் வீடும் இரண்டாக கோடு போட்டு பிரிக்கப்பட்டு இருந்தது. இதுவே போட்டியாளர்களுக்கு இடையே பல பிரச்சனைகளை கொண்டு வந்தது எனக் கூறலாம். உதாரணமாக ஆண்கள் அணி பகுதிக்கு பெண்கள் அணியினர் போக கூடாது என்ற விதிமுறையால் உப்பு மற்றும் காய்கறி சாமான்களுக்காக போட்டியாளர்கள் அடித்துக் கொண்டனர்.  

இந்நிலையில் வெளியேறுவதற்கான நாமினேஷன் பட்டியலுக்கு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த  நாமினேஷன் பட்டியலில் இருக்கும் ஜாக்குலின், பேட்மேன் ரவி, அருண், முத்துகுமரன், சௌந்தர்யா மற்றும் ரஞ்சித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் இருந்து தப்பிக்க ரஞ்சித் மற்றும் ரவீந்தர் சக போட்டியாளர்களை பிராங்க் செய்தனர். இருவரும் சண்டையிடுவது போல நடித்தனர். இத் பிராங்க் என தெரிந்ததும் மற்ற போட்டியாளர்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. 

மாட்டிக்கொண்ட பவித்ரா 

முதலில் இந்த பிராங்க் ரவீந்தர் மட்டுமே எடுத்த தனிப்பட்ட முடிவு என சக போட்டியாளர்கள் தெரிவித்து இருந்தனர். பின்னர் விஜய் சேதுபதி நேற்று அந்த முடிவை எடுக்கும் போது அவருடன் மற்ற போட்டியாளர்கள் இருந்தார்கள் என்பதை எடுத்துக் கூறினார். 

இந்த நிலையில், இன்று வெளிவந்துள்ள முதல் ப்ரோமோவில், பெண்கள் அணியில் உள்ள மூன்று பலம் குறைந்த போட்டியாளர்கள் குறித்து சாச்சனா, பெண்கள் அணியில் கூறவில்லை. ரவிந்தர் இடம் மட்டும் கூறியது ஏன் என்பது குறித்து விஜய் சேதுபதி கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் இதனால் கோபா அடைந்த சுனிதா, யூனிட்டி மண்ணாங்கட்டி எனக் கூறினார். தற்போது பவித்ராவை கேள்வி கேட்கும் அடுத்த புரோமோ வெளியாகியுள்ளது.  

அதை தொடர்ந்து வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோவில், நாமினேஷனுக்காக தான் இந்த prank என ரவிந்தர் கூறும்போது, பவித்ரா அங்கு தான் இருந்துள்ளார். இதனால் அவருக்கு தெரிந்து தான் இந்த பிராங்க் நடந்துள்ளது என விஜய் சேதுபதி கூறியதால், பவித்ரா மாட்டிகொள்கிறார். இதை பெண்கள் அணியிடம் கூறாமல் பவித்ரா விளையாடியது தவறு என தர்ஷிகா தனது கருத்தை முன் வைக்கிறார்.

பிக் பாஸ் 8ல் முதல் வாரத்தின் இறுதியில் விஜய் சேதுபதி வந்த இந்த எபிசோட்கள் மிகவும் சுவாரசியமாக உள்ளது. மேலும் முதல் வார முடிவிலேயே போட்டியாளர்களை லெஃப்ட் ரைட் வாங்கியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த சீசன் ஆர்வமாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.