எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் மாயா! சந்தர்ப்பவாதி ஆகாதீர்கள்! அர்ச்சனா கண்டனம்! இன்னும் ஓயாத சண்டை!
ஏழாவது சீசனின் டைட்டில் வின்னரான அர்ச்சனா குறிப்பிட்ட போட்டியாளரின் ரசிகர்களால் அவதூறான பேச்சுகளுக்கு ஆளாவதாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அந்த சீசனின் சக போட்டியாளரான மாயாவிற்கும் அர்ச்சனாவிற்கும் எக்ஸ் தளத்தில் வார்த்தை சண்டை தொடங்கியுள்ளது.

பல ரசிகர்களின் மனதை கவர்ந்த தமிழ் பிக் பாசின் 8 ஆவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் ஆறாம் தேதி தொடங்கி இன்று வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் கடந்த ஏழு சீசனங்களில் இல்லாத அளவிற்கு பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டன. புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி களமிறங்கினார். மேலும் ஆண், பெண்என இரு அணிகள் பிரிக்கப்பட்டன. பிக் பாஸ் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. சண்டைகளும் சச்சரவுகளும் தினந்தோறும் அதிகரித்து வந்தன. மேலும் கடந்த சீசன்களை போல் அல்லாமல் இந்த சீசனில் எந்த ஒரு குறிப்பிட்ட போட்டியாளரும் மக்களிடத்தில் பெரும் வரவேற்பு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது கடந்த ஏழாவது சீசனின் டைட்டில் வின்னரான அர்ச்சனா குறிப்பிட்ட போட்டியாளரின் ரசிகர்களால் அவதூறான பேச்சுகளுக்கு ஆளாவதாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அந்த சீசனின் சக போட்டியாளரான மாயாவிற்கும் அர்ச்சனாவிற்கும் எக்ஸ் தளத்தில் வார்த்தை சண்டை தொடங்கியுள்ளது.
அர்ச்சனாவிற்கு மிரட்டல்
கடந்த பிக் பாஸ் ஏழாவது சீசனை வைல்ட் கார்ட் போட்டியாளராக அர்ச்சனா கலந்து கொண்டார். மேலும் இதனை அடுத்து அங்கிருந்த முந்தைய போட்டியாளர்களுக்கும் இவருக்கும் அதிக சண்டை ஏற்பட்டது. மேலும் முந்தைய போட்டியாளர்கள் ஒரு குறிப்பிட்ட அணியாக சேர்ந்து அர்ச்சனாவை மொத்தமாக புரோவக் செய்து வந்தனர். இதனை எல்லாம் அசால்ட்டாக ஹேண்டில் செய்த அர்ச்சனா இறுதியாக டைட்டில் வின்னர் ஆகவும் மாறினார். தமிழ் பிக் பாஸ் சீசன் களில் முதன்முதலாக வைல்ட் கால்டு என்ட்ரி ஆக வந்த போட்டியாளர் டைட்டில் வின்னராக மாறுவது அதுவே முதல் முறையாகும்.