10 Years Of Jeeva: காதல்... கனவு... எதார்த்தம்... நிதானம்... பாகுபாடு... இயக்குநர் சுசீந்திரன் சொல்ல வந்தது என்ன?
10 Years Of Jeeva: இயக்குநர் சுசீந்திரன்- விஷ்ணு விஷால் கூட்டணியில் வெளியாகி கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்திய ஜீவா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த திரைப்படம் நம்மிடம் பேச வந்த கருத்து குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.

10 Years Of Jeeva: காதல்... கனவு... எதார்த்தம்... நிதானம்... பாகுபாடு... இயக்குநர் சுசீந்திரன் சொல்ல வந்தது என்ன?
எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இந்திய கிரிக்கெட் அணியில் சேர வேண்டும் என கனவு காணும் ஓர் இளைஞன் என்ற ஒற்றை வரியை மையமாக வைத்து எடுத்தப் படம் ஜீவா. இந்தப் படத்தில் கனவை நேக்கி நகரும் இளைஞரைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை மிக எதார்த்தமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்துள்ளார் படத்தின் இயக்குநர் சுசீந்திரன்.
இந்தப் படத்தில் கனவுகளை துரத்திச் செல்லும் நாயகனாக நடித்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். நாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
சிறுவயது கனவுடன் வலம் வரும் ஜீவா
கதாநாயகன் ஜீவா சிறு வயதிலேயே தனது தாயை இழந்து தந்தை மாரிமுத்துவால் வளர்க்கப்பட்டு வருகிறார். ஆனால், இவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் சார்லி தன் சொந்த மகன் போல பாவித்து வளர்ப்பதால், ஜீவா பெரும்பாலான நேரத்தை சார்லி வீட்டிலேயே கழிக்கிறார்.