மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா.. ‘கன்னடர் அல்லாதவர் எப்படி?’ திவ்யா கடும் எதிர்ப்பு!
மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் தூதராக தமன்னா பாட்டியா நியமிக்கப்பட்டதிலிருந்து, ஏராளமான விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

கர்நாடக சோப்புகள் மற்றும் சவர்க்காரம் லிமிடெட் (KSDL) ஆதரவு பெற்ற மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் தூதராக தமன்னா பாட்டியா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. குத்து ரம்யா என தமிழக ரசிகர்களால் அறியப்படும் நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா, ‘கர்நாடகா 'கன்னட பெருமைக்காக' போராடும் நேரத்தில் 'கன்னடிகர் அல்லாதவர்' பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டது’ குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
கேள்வி எழுப்பிய குத்து ரம்யா
தமன்னா பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டது குறித்து X (முன்னர் ட்விட்டர்) மற்றும் இன்ஸ்டாகிராமில் ரம்யா தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார், "KSDL-ஐ புதுப்பிக்கும் நோக்கத்தைப் பாராட்டுகிறேன், ஆனால் செயல்படுத்துவது ஒரு கண்துடைப்பு போல் தெரிகிறது. வணிகக் கண்ணோட்டத்தில் கூட, குறிப்பாக நிறுவனம் குறைந்து கொண்டிருக்கும் போது, மைசூர் சாண்டல் சோப்பு சின்னமானது மற்றும் மிகப்பெரிய பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது, அதற்கு ஒரு பிராண்ட் தூதர் தேவையில்லை,’’ என்று ரம்யா குறிப்பிட்டுள்ளார்.