Suriya Speech: ‘அவங்க மிகப்பெரிய சக்தி.. 5 ஆண் செய்யக்கூடிய வேலைய ஒரு பெண்… ஆனா அங்கீகாரம்?’ -சூர்யா பேச்சு!
கிட்டத்தட்ட 15 வருடங்களாக அகரத்தில் இருந்து 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு நாம் பரிசு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதில் பெரும்பான்மையானோர் பெண்களே. சமுதாயத்தில் அதிகமாக கல்லூரி படிப்பை முடிப்பவர்களும் பெண்களாகவே இருக்கிறார்கள்.

சூர்யா பேச்சு!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கிய (STEM) உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் பெண்களின் பங்கு அதிகரிக்க வேண்டும் என்பதை கருப்பொருளாக கொண்டு, அகரம் அறக்கட்டளை உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் சார்பாக ‘EMPOW HER - 2024’ என்ற கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சூர்யா, “அகரத்தினுடைய கூட்டு முயற்சியால் STEM பற்றிய ஒரு கருத்தரங்கு இன்று நடைபெற்று இருக்கிறது. இதனை நான் மிக மிக முக்கியமான ஒன்றாக பார்க்கிறேன்.
அகரம் ஆரம்பித்த 15 வருடங்களில் அதன் வழியாக இதுவரை கிட்டத்தட்ட 6000 மாணவர்கள் படித்திருக்கிறார்கள். தற்போதும் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் 70% பேர் பெண்கள் ஆவர்.