‘இம்முறை அடி ரொம்ப பலமா இருக்கும்.. என்னுடைய அடுத்தப்பட டைரக்டர் இவர்தான்’ - மேடையில் அறிவித்த சூர்யா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘இம்முறை அடி ரொம்ப பலமா இருக்கும்.. என்னுடைய அடுத்தப்பட டைரக்டர் இவர்தான்’ - மேடையில் அறிவித்த சூர்யா!

‘இம்முறை அடி ரொம்ப பலமா இருக்கும்.. என்னுடைய அடுத்தப்பட டைரக்டர் இவர்தான்’ - மேடையில் அறிவித்த சூர்யா!

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 27, 2025 07:15 AM IST

என்னாலேயே இந்த இடத்திற்கு வரும்பொழுது உங்களால் இன்னும் சிறப்பான இடத்திற்கு வர முடியும். நீங்கள் என் மீது காட்டும் அன்பை கண்டு நான் மிகவும் நெகிழ்ந்து போகிறேன். - சூர்யா பேச்சு!

‘இம்முறை அடி ரொம்ப பலமா இருக்கும்.. என்னுடைய அடுத்தப்பட டைரக்டர் இவர்தான்’ - மேடையில் அறிவித்த சூர்யா!
‘இம்முறை அடி ரொம்ப பலமா இருக்கும்.. என்னுடைய அடுத்தப்பட டைரக்டர் இவர்தான்’ - மேடையில் அறிவித்த சூர்யா!

வரலாற்றை மாற்றி எழுதலாம்

அங்கு பேசிய அவர், ‘பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இந்த இடத்தில் மரியாதையையும், பிரார்த்தனையையும் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த சம்பவத்தைக் கேட்டு நான் அப்படியே உடைந்து போய் விட்டேன். பயங்கரவாதம் எந்த வகையில் நடந்தாலும் அது நமக்கு இழப்பை கொண்டு வந்து சேர்க்கும்.

உங்களுடைய வரலாற்றை நீங்கள் மாற்றி எழுதலாம். இங்கிருக்கும் அனைவருக்கும் நான் கூற விரும்புவது, நீங்கள் எங்கிருந்து எப்படி வருகிறீர்கள் என்பதெல்லாம் இங்கு கணக்கு கிடையாது. உங்களுக்கு உண்மையிலேயே ஒன்றின் மீது ஆர்வம் இருந்தால், அது வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அதற்காக நீங்கள் உழைத்தால் உங்களுக்கு அது நிச்சயம் கிடைக்கும். நான் செல்லும் இடங்களிலெல்லாம் இதைத்தான் சொல்லி வருகிறேன்.

நெகிழ்ந்து போகிறேன்.

என்னாலேயே இந்த இடத்திற்கு வரும்பொழுது உங்களால் இன்னும் சிறப்பான இடத்திற்கு வர முடியும். நீங்கள் என் மீது காட்டும் அன்பை கண்டு நான் மிகவும் நெகிழ்ந்து போகிறேன். என்னுடைய பெயரை உங்களது உடலில் டாட்டுவாக குத்திக்கொள்கிறீர்கள். நீங்கள் அதை செய்ய வேண்டாம் என்று நினைக்கிறேன்.

மே 1 அன்று ரெட்ரோ படம் ரிலீஸ் ஆகிறது. இம்முறை நிச்சியம் உங்களை நான் திருப்தி அடையச் செய்வேன் என்று நினைக்கிறேன். நான் அடுத்ததாக வெங்கட் அட்லூரியின் படத்தில் நடிக்கிறேன். அதை இங்கு மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறேன். மே மாதத்திலிருந்து படப்பிடிப்பை தொடங்க இருக்கிறோம்.

பாக்சிங் ரிங்கிற்குள் நீங்கள் கீழே விழுந்தால் தோல்வியாளனாக மாறிவிட மாட்டீர்கள். நீங்கள் மறுபடியும் எழ மறுத்தீர்கள் என்றால் மட்டுமே தோல்வியாளனாக மாறுவீர்கள். நாங்கள் தற்போது மீண்டும் எழுந்திருக்கிறோம். இந்த முறை வலுவான பஞ்ச் எங்களிடம் இருந்து வரும்.’ என்று பேசினார். முன்னதாக, சூர்யா நடிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் வெளியான கங்குவா திரைப்படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்று படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.