16 ஆண்டு கனவு..பிரபஞ்சம் நடத்தி வைக்கும்..மீண்டும் ஜோதிகாவுடன் இணைய விருப்பம் தெரிவித்த சூர்யா
கங்குவா படத்தின் புரொமோஷனுக்காக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு சுற்று வருகிறார் நடிகர் சூர்யா. ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்து நடிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்திருக்கும் அவர், இந்த பிரபஞ்சம் அதை செய்யும் என நம்புவதாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஸ்டார் தம்பதிகளாக சூர்யா ஜோதிகா இருந்து வருகிறார்கள். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
திருமணத்துக்கு முன் சில படங்களில் ஜோதியாக இணைந்து நடித்திருக்கும் இவர்கள் திரையிலும் தங்களது கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தியுள்ளனர். கடைசியாக சூர்யா - ஜோதிகா இணைந்து 2006இல் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்தார்கள். இதன் பின்னர் 16 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக சூர்யா தெரிவித்துள்ளார்.
வரும் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் கங்குவா படத்தின் புரொமோஷனில் ஈடுபட்டு வருகிறார் நடிகர் சூர்யா. பல்வேறு ஊர்களில் படத்தின் புரொமோஷன் நடைபெற்று வரும் நிலையில், கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் சூர்யா இவ்வாறு தெரிவித்துள்ளார்.