மூன்று மடங்கு அதிக சம்பளம்..என்னை விட நன்கு தமிழ் பேசிய ஜோதிகா..அப்போது நான் உணர்ந்த விஷயம்! சூர்யா பேச்சு
என்னை விட நன்கு தமிழ் பேசிய ஜோதிகா, மூன்று மடங்கு அதிக சம்பளம் வாங்கினார். அப்போது தான் சில விஷயங்களை உணர்ந்தேன் என கங்குவா புரொமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா எமோஷனலாக பேசியுள்ளார்.

மூன்று மடங்கு அதிக சம்பளம்..என்னை விட நன்கு தமிழ் பேசிய ஜோதிகா..அப்போது நான் உணர்ந்த விஷயம்! சூர்யா பேச்சு (Sunil Khandare)
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிலேயே அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் ஸ்டார் தம்பதிகளாக சூர்யா - ஜோதிகா இருந்து வருகிறார்கள். அடுத்தடுத்து பாலிவுட் படங்களில் கமிட்டாகியிருக்கும் ஜோதிதாக, தற்காலிகமாக மும்பையில் செட்டிலாகியுள்ளது.
அவருடன் நடிகர் சூர்யாவும் மும்பையில் வசித்து வருகிறார். அத்துடன் தனது படங்களின் ஷுட்டிங்குக்காக மட்டும் சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு செல்வதும், மும்பைக்கு வருவதுமாக இருக்கிறார்.
சூர்யாவின் புதிய படமான கங்குவா வரும் வியாழக்கிழமை உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் சூர்யா, இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் படத்தை பிரபலப்படுத்தி வருகிறார்.