‘தம்பியின் கனவை மூத்த அண்ணன் நிறைவேற்றி விட்டார்..’ - மெய்யழகன் இயக்குநருக்கு தார் கார் கொடுத்த சூர்யா!
குறிப்பிற்காக நான் ROXX AX 5L 4*4 வெள்ளை நிற காரிற்காக நான் காத்திருந்தேன். அந்தக்கார் இறங்கிய உடன் நான் அதனை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு பணத்தை சேமித்து வாங்குவதற்கு தயார் ஆனேன். ஆனால், நான் காத்திருக்க வேண்டிய காலம் நீண்டு கொண்டே சென்றது. - பிரேம் நெகிழ்ச்சி!

பிரபல இயக்குநர் பிரேமிற்கு நடிகர் சூர்யா தார் காரை பரிசாக வாங்கி கொடுத்திருக்கிறார். இது குறித்து பிரேம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ‘ மகேந்திரா தார் காரானது என்னுடைய கனவு கார். ஆனால், சில காரணங்களால் நான் 5 கதவுகள் கொண்ட மகேந்திரா காருக்காக காத்திருந்தேன்.
குறிப்பிற்காக நான் ROXX AX 5L 4*4 வெள்ளை நிற காரிற்காக நான் காத்திருந்தேன். அந்தக்கார் இறங்கிய உடன் நான் அதனை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு பணத்தை சேமித்து வாங்குவதற்கு தயார் ஆனேன். ஆனால், நான் காத்திருக்க வேண்டிய காலம் நீண்டு கொண்டே சென்றது.
அதனை தொடர்ந்து நான் தயாரிப்பாளர் ராஜா சாரிடம் உதவி கோரினேன். அவர் என்னுடைய ஆசையை புரிந்து கொண்டு கடுமையான பணி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் எனக்காக அவர் கடுமையாக முயற்சி செய்தார். ஒரு பக்கம் நான் கேட்ட வேரியன்ட் கிடைத்தால், இன்னொரு பக்கம் நான் கேட்ட கலர் கிடைக்காமல் போனது.
ஒரு வேளை கலர் கிடைத்தால் நான் கேட்ட வேரியன்ட் கிடைக்காமல் போனது. ஏதோ ஒன்று மிஸ்ஸாகி கொண்டே சென்றது. நான் பொறுமையை இழந்து விட்டேன். ஆனால், ராஜா சார் முயற்சியை கைவிட வில்லை. ஒரு கட்டத்தில் தேவைகள் மாறின. நான் தார் காருக்காக வாங்கிய காசை செலவழித்து விட்டேன். நான். இதனை ராஜா சாரிடமும் கூறி விட்டேன். அவர் அமைதியாக கேட்டுக்கொண்டார். ஆனால், அதற்கு பின்னர் அவருக்கு வேறு திட்டம் இருந்திருக்கிறது.
நேற்று முன்தினம் சூரியா அண்ணா எனக்கு வெள்ளை நிற தார் ராக்ஸ் AX5L 4x4 காரின் புகைப்படத்தை அனுப்பி, 'அது வந்துவிட்டது' என்று மெசேஜ் அனுப்பி இருந்தார். உடனே நான் அதிர்ச்சியடைந்து ராஜா சாருக்கு போன் செய்து, 'இப்போது அதை வாங்க என்னிடம் பணம் இல்லை' என்றேன்.
அவர் சிரித்துக்கொண்டே, 'பிரேம், இது சூர்யா சாரிடமிருந்து உங்களுக்குக் கிடைத்த பரிசு' என்றார். நான் வாயடைத்துப் போனேன். தொடர்ந்து லட்சுமி இல்லத்திற்கு அழைக்கப்பட்டேன். கதவுகள் திறந்ததும், என்னுடன் அதன் நீண்ட பயணத்தைத் தொடங்க ஒரு கம்பீரமான வெள்ளை தார் ராக்ஸ் AX 5L 4x4 நின்று கொண்டு இருந்தது. அதனருகில் என் அன்பான மெய்யழகன் கார்த்தி சகோதரர் நின்று கொண்டிருந்தார்.
அவர் என் கனவுகளைத் திறக்க, சாவியை ஒப்படைத்தார். நான் முற்றிலும் நம்ப முடியாமல் நின்றேன். நாங்கள் ஒரு சிறிய பயணம் சென்றோம், பின்னர் நான் தார் காரை என் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றேன். இரண்டு நாட்களாகிவிட்டன, நான் தார் காரை குறைந்தது 50 கி.மீ. ஓட்டிவிட்டேன்..
இது இன்னும் ஒரு கனவு போல உணர்கிறது..
இதை ஒரு பரிசாக நான் பார்க்கவில்லை..
ஒரு தம்பியின் கனவை நிறைவேற்றும் மூத்த சகோதரனாக நான் இதைப் பார்க்கிறேன்! நன்றி சூர்யா அண்ணா, கார்த்தி பிரதர், ராஜா சார்’ என்று பதிவிட்டு இருக்கிறார்.
