தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Supporting Actress Attacked Her Husband With A Friend In Covai

பகீர்.. சினிமாவில் நடிக்க எதிர்ப்பு.. கணவரை ஆள் வைத்து தாக்கிய துணை நடிகை!

Divya Sekar HT Tamil
Mar 26, 2023 10:20 AM IST

கோவையில் சினிமாவில் நடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் கணவரை நண்பரை வைத்து துணை நடிகை தாக்கி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவரை ஆள் வைத்து தாக்கிய துணை நடிகை
கணவரை ஆள் வைத்து தாக்கிய துணை நடிகை

ட்ரெண்டிங் செய்திகள்

இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று ஜமீன்முத்தூர் பகுதியில் ரமேசும்.ரம்யாவும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது அவர்களை வழிமறித்த மர்மநபர்கள் ரமேஷை தாக்கியதாக தெரிகிறது. மேலும் பிளேடால் ரமேசின் கழுத்து பகுதியில், கையில் கீறியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் ரமேஷ்க்கு மட்டும் காயம் ஏற்பட்டு இருந்தது ரம்யாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

மேலும் அவர் கூறியதும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ரம்யாவின் செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த டேனியல் சந்திரசேகர் (43) என்பவருடன் அடிக்கடி பேசியது தெரியவந்தது. மேலும் அவரை வைத்து ரமேஷை தாக்கியதும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ரம்யா, டேனியல் சந்திரசேகர் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரம்யா அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில், “குடித்துவிட்டு கொடுமைப்படுத்தியதால் ரம்யா குழந்தைகளுடன் கோவையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றார். பின்னர் ரமேஷ் கோவைக்கு சென்று சமாதானப்படுத்திய பிறகு, அவ்வப்போது குழந்தைகளை மட்டும் நல்லிசுவுண்டன் பாளையத்தில் உள்ள வீட்டிற்கு ரம்யா அழைத்து வந்துள்ளார்.

இதற்கிடையெ சினிமாவில் நடிக்கவேண்டும் என்று ரம்யாவுக்கு ஆசை ஏற்பட்டது. இதற்கு ரமேஷ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் பிரிந்துவாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த டேனியல் சந்திரசேகர் மூலம் சினிமாவில் நடிக்க ரம்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.இதையடுத்து சின்னத்திரை நாடகங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.

இந்தநிலையில் ரமேஷ் அவரது வீட்டை விற்பனை செய்வதற்கு முடிவு செய்ததாக தெரிகிறது. இதற்கிடையில் டேனியல் பொள்ளாச்சியில் ஒரு வீட்டை ரூ.10 லட்சத்திற்கு வாங்கி தருவதாக உறவினர் ஒருவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து ரம்பாவை சினிமாவில் நடிக்கக்கூடாது என்று ரமேஷ் மீண்டும் கூறியதாக தெரி கிறது. மேலும் குடித்து விட்டு தாக்கியதால் ஆத்திரம் அடைந்த ரம்யா, இதுகுறித்து டேனியல் சத்திரசேகரிடம் கூறியுள்ளார்.

மேலும், ரமேசை தாக்கி, மிரட்டி வைத்தால் அந்த வீட்டை ரூ.10 லட்சத்துக்கு வாங்கி தருவதாக ரம்யா கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து ரம்யா ரமேஷை வெளியில் சென்று பேசலாம் என்று மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று உள்ளார். மேலும் எங்கு செல்கிறோம். எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது குறித்து செல் போனில் டேனியல் சத்திரசேகருக்கு குறுந்தகவல் அனுப்பி உள்ளார்.

உடுமலைக்கு செல்லும் வழியில் கணவர் மீது தாக்குதல் திட்டத்தை செயல்படுத்த முடியாததால், ஜமீன்முத்தரில் வைத்து ரமேஷை தாக்கி விட்டு, டேனியல் சந்திரசேகர் தப்பி சென்று விட்டார். மேலும் தண்பரை வைத்து கணவரை தாக்கிவிட்டு நாட கம் ஆடிய ரம்யா போலீசாரின் விசாரணையில் சிக்கிச் கொண்டார்”எனத் தெரிவித்தனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்