ஜெயிலர் 2 எதிர்பார்ப்பு.. கேரளாவில் சேட்டனுடன் மீட்டிங்..மீண்டும் ஸ்கெட்ச் போடும் நெல்சன்! - ஒரு வேளை இருக்குமோ?
மோகன்லால் மேத்யூ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அந்தக்கதாபாத்திரம் மலையாளம் மட்டுமல்லாது தமிழிலும் வரவேற்பை பெற்றது. தற்போது ஜெயிலர் படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது.

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கேரளாவில் ஹிருதய பூர்வம் படப்பிடிப்பில் இருந்த மோகன்லாலை நேரில் சந்தித்து பேசி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சந்திப்பில் அவர்கள் ஜெயிலர் 2 படம் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக, நடிகர் ரஜினி நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் சிவராஜ் குமார், ஜாக்கி ஜெராஃப் மற்றும் சுனில் உட்பட பலரும் நடித்திருந்தனர். இதில் மோகன்லால் மேத்யூ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்தக்கதாபாத்திரம் மலையாளம் மட்டுமல்லாது தமிழிலும் வரவேற்பை பெற்றது. தற்போது ஜெயிலர் படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இந்த பாகத்திலும் மோகன்லால் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் இது குறித்து எம்புரான் பட புரோமோஷன்களில் மோகன்லால் பேசினார்.
மோகன்லாலுக்கு விருப்பம் இருக்கிறதா?
அதில் அவர், ‘, ‘ ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகு எனக்கு தமிழில் படம் நடிப்பதற்காக நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால், நான் எம்புரான் மற்றும் இதர படங்களில் பிசியாக இருந்தேன்.
அதனால் என்னால் தமிழில் எந்த படத்திலும் கமிட்டாக முடியவில்லை. தற்போது ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கி இருக்கிறது. அந்தப் படத்தில் என்னை நடிக்க கூப்பிட்டால் நான் நிச்சயமாக செல்வேன்; ஆனால், என்னை கூப்பிடுவார்களா என்பது எனக்கு தெரியாது.
ஜெயிலர் 2 படத்தில் இடம்பெற்ற மேத்வியூ கேரக்டர் மிகவும் நன்றாக இருந்தது. அந்த கேரக்டரில் வேறு யாரேனும் நடித்திருந்தால் கூட நன்றாகத்தான் இருந்திருக்கும். அந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும், தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறி என்னை ரஜினிசார் பார்க்க வந்தார். அப்படி ஒரு அந்தஸ்தில் இருக்கக்கூடிய ஒரு நடிகர் என்னிடம் உதவி என்று கேட்கும் போது, நான் எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும். அதை நான் செய்துதானே ஆக வேண்டும்.’ என்று பேசி இருந்தார்.

டாபிக்ஸ்