‘எனதருமை நண்பர் சமுத்திரக்கனி.. என்ன ஒரு அருமையான படைப்பு..’ - மாணிக்கத்தை அறிக்கை விட்டு பாராட்டிய ரஜினிகாந்த்
உண்மை சம்பவத்தை வைத்து திரைக்கதை, வசனத்தை எழுதி சிறப்பாக இயக்கியிருக்கும் நந்தா பெரியசாமி தான் ஓர் அற்புதமான இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார். - ரஜினிகாந்த்!
சமுத்திரக்கனி நடித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான திரு. மாணிக்கம் திரைப்படத்தை ரஜினிகாந்த் பாராட்டி இருக்கிறார்.
இது குறித்து ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில், ‘ஒரு நல்ல படத்துக்கு அடையாளம், படம் பார்த்த பிறகு அதில் வரும் காட்சிகள், கதாபாத்திரங்கள் ஒரு மூன்று, நான்கு நாட்களுக்காவது நினைவில் வந்துகொண்டே இருக்க வேண்டும்; அந்த படத்தில் வரும் ஏதாவது ஓர் நல்ல விஷயத்தை, நம் வாழ்க்கையில் நாமும் கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டும்.
அந்த மாதிரி சமீபத்தில் நான் பார்த்த திரு.மாணிக்கம் என்கிற படம் ஓர் அற்புதமான படைப்பு. உண்மை சம்பவத்தை வைத்து திரைக்கதை, வசனத்தை எழுதி சிறப்பாக இயக்கியிருக்கும் நந்தா பெரியசாமி தான் ஓர் அற்புதமான இயக்குந்ர் என்பதை நிரூபித்திருக்கிறார். திரையுலகில் அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.
இந்த திரைப்படம் இவ்வளவு சிறப்பாக உருவாக பணியாற்றியிருக்கும் மைனா சுகுகுமார், விஷால் சந்திரசேகர், குணா ரகு அவர்களுக்கும் கட்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் எனது அருமை நண்பர் சமுத்திரக்கனி, மதிப்பிற்குரிய பாரதிராஜா மற்றும் அனைத்து நடிகர், நடிகைகளுக்கும், இந்த படத்தை தயாரித்திருக்கும் G.P.ரவி குமார் மற்றும் என்னுடைய அருமை நண்பர் லிங்குசாமி மற்றும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
டாபிக்ஸ்